Skip to main content

டி.வி ஷோவில் இஸ்லாமியர்களை எதிரிகளாய் கட்டமைக்கும் பா.ஜ.க செயல்திட்டம்



நேற்று புதிய தலைமுறையில் எழுத்தாளர்கள் விருதுகளை திரும்ப அளிப்பது பற்றின நேர்பட பேசு பார்த்தேன். அருமையான விவாதம். குணசேகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிற விதம் பாராட்டத்தக்கது. பா.ஜ.க சார்பில் வந்திருந்த ராமசுப்பிரமணியனுக்கும் மனுஷ்யபுத்திரனுக்குமான சண்டை தான் அல்டிமேட். அதை மிகவும் ரசித்தேன். மனுஷ்யபுத்திரன் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு ஒருவரிடம் மோதி பார்த்ததில்லை. பா.ஜ.க சார்பாளருக்கும் ஒருவிதத்தில் இது தேவைப்படுகிறது. அவர்கள் தாம் ஒரு இஸ்லாமியருடன் மோதுகிறோம் எனும் செய்தியை கட்சிக்காரர்களுக்கும் மக்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறார்கள். அதன் மூலம் இந்து – இஸ்லாம் எதிரிடையை இங்குள்ள கருத்துச்சூழலில் நிறுவ விரும்புகிறார்கள்.

 சன் நியூஸ் விவாதத்திலும் ஒரு பா.ஜ.க கட்சிக்காரரிடம் இதை கவனித்தேன். பா.ஜ.கவை மிக மோசமாய் நான் திட்டிய போதும், பிராமணர்களை குற்றம் சாட்டிய போதும் அவர் சாதாரணமாய் எடுத்துக் கொண்டு பதில் சொன்னார். ஆனால் ஒரு முஸ்லீம் நண்பர் அதையே கூறிய போது கொதிப்படைந்து “நாங்க இனி முஸ்லீம்ஸையும் ஓபனா தாக்குவோம்” என்றார். மனுஷ்யபுத்திரனுடன் விவாதிக்கும் போதும் அவர்கள் அடிக்கடி “அப்துல் ஹமீத்” என பெயரை குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது. இது ஒரு திட்டமிட்ட நாடகமோ என தோன்றுகிறது. தமிழக மீடியாவில் பா.ஜ.கவினரை இடதுசாரிகள், மதசார்பற்றவர்கள், முற்போக்காளர்கள் என பலரும் எதிர்க்கிறார்கள். ஆனால் ஒரு இஸ்லாமியர் விவாதத்தில் எதிர்வரும் போது மட்டும் ஏன் மிகவும் குரோதத்துடனும் வன்மத்துடமும் பேசுகிறார்கள்? இதன் பின் ஒரு தெளிவான திட்டமிடல் உள்ளது. நாம் இதற்கு இரையாகாமல் கவனமாய் இருக்க வேண்டும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...