Skip to main content

நயன்தாரா சீஹல்லின் விருது அதிர்ச்சி மதிப்பு போராட்டம்



தாத்ரியில் இந்துத்துவா அரசியல்வாதிகள் நடத்திய படுகொலையை கண்டித்து நயன்தாரா சாஹல் தனது சாகித்ய அகாதெமி விருதை திரும்ப அளிப்பதாய் கூறியுள்ளார். அவர் 1987இல் விருது பெற்றார். அதற்கு இரு வருடங்களுக்கு முன்பு தான் சீக்கியர்களை காங்கிரஸ் அரசு கொடுமையான முறையில் வேட்டையாடி கொன்றது. அந்த படுகொலைகளைக் கண்டித்து ஏன் சாஹல் அப்போதே விருதை வாங்க மறுக்கவில்லை. அதன் பின்னர் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதும், மதக்கலவரங்கள் நடத்தப்பட்ட போதும் அவர் ஏன் விருதை திரும்ப அளிக்கவில்லை ஆகிய கேள்விகளை ராஜ்திப் சர்தேசாய் இக்கட்டுரையில் எழுப்புகிறார்.

 சாஹல் இதற்கு அளிக்கும் பதிலான “இப்போது மட்டுமே இந்துத்துவா அரசு ஆட்சியில் இருக்கிறது” என்பது ஏற்கும் படியாய் இல்லை. ஏனென்றால் காங்கிரசும் மென்மையான இந்துத்துவா அரசியல் கொண்டது தான். நரசிம்மராவ் ஆட்சியில் அவர் மதக்கலவரங்களை, இஸ்லாமியர்களின் படுகொலைகளை தடுக்கவில்லை. ஏனென்றால் அவர் ஆர்.எஸ்.எஸ் சார்பு கொண்டவர். அறுபதுகளிலேயே ஐந்து மாநிலங்களில் பசுவதை சட்டத்தை இயற்றியது காங்கிரஸ் அரசாங்கம் தான். காந்தியின் மரணத்துக்கு கருத்தியல் பின்புலம் நல்கிய சவார்க்கரை விடுதலை போராட்ட தியாகி என வர்ணித்து அவர் மீதான தடையை நீக்கி அவரை சுதந்திரமாய் இயங்க அனுமதித்ததும் காங்கிரஸ் தான். எல்லாவற்றையும் விட முக்கியமான கேள்வி சீக்கியர்களின் படுகொலைக்கு எதிராய் அன்று தீவிரமாய் போராடிய சாஹல் ஏன் விருதை மட்டும் ஏற்றுக் கொண்டார் என்பது.
 நான் அடிப்படையில் இதை ஒரு அதிர்ச்சி மதிப்பு போராட்டமாகத் தான் பார்க்கிறேன். ஆனால் அத்தகைய போராட்டங்கள் தற்காலிகமானவை. அரசை நாம் கண்டிக்கலாம், விமர்சிக்கலாம், ஆனால் ஒரேயடியாய் அதனுனான உறவை துண்டிக்கும் விதத்தில் செயல்படக் கூடாது. அது ஒருவிதத்தில் இந்துத்துவா சக்திகளுக்கே சாதகமாய் முடியக் கூடும்.

87இல் அவர் விருதை ஏற்றதில் தவறில்லை. அது அவரது இலக்கிய செயல்பாட்டுக்காய் வழங்கப்பட்டது. நீங்கள் ஒரு அரசை விமர்சிக்கும் வேளையில் அது அளிக்கும் அங்கீகாரத்தை மறுக்க வேண்டியதில்லை. ஏனென்றால் நம் விமர்சனத்துக்கு உள்ளாகிறவர்கள் நம் எதிர்தரப்பினரே அன்றி எதிரிகள் அல்ல. எதிர்தரப்பினோடு முரண்படும் போது அவர்களை முழுக்க நிராகரிக்க வேண்டியதில்லை. முரண்படுவது ஒருவரை மாற்றத்தானே ஒழிய மறுக்க அல்ல.

சாஹலை தொடர்ந்து அஷோக் வஜ்பய் என்னுடம் இன்னொரு பெருந்தலையும் விருதை திரும்ப அளிக்கிறார். சாஹல் நேருவின் சகோதரியின் மகள். அஷோக் வஜ்பய் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் லலித் கலா அகாதெமியின் தலைவராய் இருந்தவர். முன்னாள் அரசு அதிகாரி. இருவருக்குமே ஒரு மறைமுக காங்கிரஸ் தொடர்பு உள்ளது. இருவரும் அதிகார வட்டத்தை சேர்ந்தவர்கள். எலைட்டுகள். சாஹல் தான் காங்கிரசோடு தொடர்பற்றவர் என கூறினாலும் அவரது போராட்டங்களுக்கு என்று ஒரு தொடர்ச்சி இல்லை என்பது சிக்கலானது. கடந்த பத்து வருடங்களில் இதைவிட கொடுமையான மதக்கலவரங்களை பா.ஜ.க நடத்திய போது அவர் எங்கு போனார்? காங்கிரஸ் ஆட்சியில் மோசமான ஊழல்கள் நடந்த போது என்ன செய்து கொண்டிருந்தார்? ஒருவேளை இப்போது அவர் தன் சகிப்புத்தன்மையை இழந்திருக்கலாம். ஆனால் அரசியல் எதிர்வினை ஆற்றுகிறவர்கள் அவ்வப்போது மட்டுமே உயிர்கொள்கிறவராய் இருக்க கூடாது. அது பல சந்தேகங்களை தூண்டும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...