Skip to main content

மாட்டுக்கறி தடையும் பிராமணியமும்



இன்று சன் நியூஸ் விவாத மேடையில் மாட்டுக்கறி தடை பற்றி விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்ட நான் இது அடிப்படையில் ஒரு சாதிய பிரச்சனை என்றேன். பா.ஜ.கவில் உள்ள பலருமே அசைவம் உண்பவர்கள். கணிசமான இந்துக்களும் அசைவர்கள் தாம். கேரளா போன்ற மாநிலங்களில் மிக அதிகமாய் மாட்டுக்கறி உண்பவர்கள் இருக்கிறார்கள். ஹைதராபாதில் இஸ்லாமியர் நோன்பை முறிக்க உண்ணும் ஹலீம் எனும் மாட்டுக்கறி கலந்த உணவை இஸ்லாமியரை விட பிராமணர்களும் இந்துக்களும் உண்பதாய் காஞ்சன்யா ஒரு பேட்டியில் சொல்கிறார். மாட்டுக்கறி பிராமணர்களுக்கு மட்டுமே ஒவ்வாமல் இருக்கிறது. ஜெயின்கள் இன்னொரு பக்கம் அனைத்து வகை அசைவ உணவுகளையும் எதிர்க்கிறார்கள். ஆனால் இந்த இரு மிகச்சிறுபான்மை சமூக மக்களின் தேவைக்காக பா.ஜ.க ஒட்டுமொத்த இந்தியர்களின் உணவு பண்பாட்டையும் அவமதிக்கிறது. அது மட்டுமல்ல இஸ்லாமியர் மட்டுமே மாட்டுக்கறி உண்பதாய் ஒரு போலி பிரச்சாரத்தையும் மேற்கொள்கிறது என்றேன்.

 என்னைத் தொடர்ந்து இவ்வாதத்தை முன்னெடுத்த இஸ்லாமிய நண்பர் ஒருவர் எப்படி முகலாய மன்னர்களின் காலத்திலும் அரசவையில் முக்கிய பதவிகளில் இருந்த பிராமணர்கள் மாட்டுக்கறி தடையை தம் செல்வாக்கால் கொண்டு வந்தார்கள், இன்றும் எப்படி நாட்டின் 3% பேரின் தனிப்பட்ட செண்டிமெண்ட் மிச்ச 97% மக்கள் மீது திணிக்கப்படுகிறது என்றார். அதுவரை அமைதியாக பேசிய பா.ஜ.கவின் நாராயணன் பிராமணர்களைப் பற்றி விமர்சித்ததும் கொந்தளித்து நீங்கள் ஒரு சமூகத்தை தாக்கினால் நாங்கள் இஸ்லாமியரையும் இனி நேரடியாய் தாக்கி பேசுவோம் என மிரட்டினார். அதாவது தலித்துகள் மற்றும் பிற மத்திய சாதியினர் மீது என்ன கேள்வி எழுந்தாலும் பா.ஜ.கவுக்கு பிரச்சனையில்லை. பிராமணர்கள் மீது ஒரு விரல் சுட்டப்பட்டால் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.
நாராயணன் ஒரு பக்கம் பசுமாட்டை மட்டுமல்ல காளை மற்றும் எருமைகளை கொல்வதையும் தான் பாஜக எதிர்க்கிறது என்றார். நம்முடைய அரசியலமைப்பு சட்டம் முதிய பசுமாடுகளை கொல்வதை அனுமதிக்கிறதே என்று கேட்டதற்கு இது போன்ற சட்டங்களை மாநிலங்கள் தம் விருப்பப்படி உருவாக்கலாம் என்றார். 3% பேரின் செண்டிமெண்டுக்காய் ஏன் வயதாகி பயனற்ற மாடுகளை கோசாலாக்களில் பாதுகாக்க வேண்டும் என அவர் விளக்கவில்லை. பா.ஜ.கவுக்கு எந்த தெளிவான கொள்கையும் இல்லையும் என்பதும் இதில் தெளிவாகியது. பா.ஜ.கவுக்கு எல்லா சமூகத்தினரின் ஓட்டும் ஆதரவும் வேண்டும். ஆனால் ஒரு சமூகத்தின் பண்பாட்டையும் மொழியையும் மட்டும் முன்னிலைப்படுத்துவார்கள். அதை மிச்ச சமூகத்தினர் மீது திணிப்பார்கள். ஒரு மாநிலத்தில் மதத்தையும் வேறு ஒரு மாநிலத்தில் சாதியையும் வைத்து அரசியல் செய்வார்கள். படித்த மேல்தட்டினரிடம் நாங்கள் மதசார்பற்றவர்கள், பொருளாதார வளர்ச்சியே எங்கள் செயல்திட்டம் என்று கூறி ஓட்டுக் கேட்பார்கள். இந்துத்துவாவை தம் கொள்கை என்று கூறும் பா.ஜ.கவின் நாராயணன் இன்றைய நிகழ்ச்சியில் தம் கட்சி மதசார்பற்றது என்று வேறு கூறினார். தம் கொள்கையான இந்துத்துவாவில் கூட உறுதி இல்லாமல் வெறும் சந்தர்ப்பவாதிகளாய் இருக்கிறார்கள்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...