Skip to main content

“மாங்கா” காமிக்ஸில் காந்தி




ஜப்பானிய “மாங்கா” காமிக்ஸில் காந்தியின் வாழ்க்கைசரிதம் படித்தேன். ரொம்ப எளிமைப்படுத்தப்பட்ட ஆனால் நளினமான அழகான புத்தகம். ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இதை பரிந்துரைக்கலாம்.
வளர்ந்தவர்களுக்கும் நல்ல அனுபவமாய் இருக்கும். இதில் ஒரு விசயம். காந்தியை தவிர இந்தியர்கள் மற்றும் வெள்ளைகாரர்களுக்கு முக்கு சற்று சப்பையாகவும் கண்கள் சுருங்கி நீளமாகவும் உள்ளது. படங்களை வரைந்த கிஸுகி எபினே தன் நாட்டினரை கவர்வதற்காய் இப்படிய ஒரு ஜப்பானிய சாயலை அளித்திருக்கலாம். அவ்விதத்தில் நமக்கு இது ஒரு வித்தியாசமான காட்சிபூர்வ அனுபவத்தை கொடுக்கிறது. இதில் வரும் நேரு ஒன்பதாம் வகுப்பு பையனைப் போல் தோன்றுகிறார். ஆனால் சுதந்திரம் கிடைக்கும் காலத்தில் நேருவுக்கு வயதாகி விட்டது என்பதை ஓவியர் மறந்து விட்டார் போல. அம்பேத்கர், வல்லபாய் பட்டேல் போன்றவர்களையும் இன்னொரு பக்கம் கோட்சே, ஆர்.எஸ்.எஸின் கதைகளையும் சேர்த்திருந்தால் கதை இன்னும் நுட்பமாய் சுவாரஸ்யமாய் வந்திருக்கும். கிஸுகி எபினே தனக்கு கொடுக்கப்பட்ட ஒரு பணி இலக்காக தான் இதை எடுத்துக் கொண்டிருக்கிறார். கிடைத்த நேரத்தில் காந்தியின் சுயசரிதை, அவரைப் பற்றி எழுதப்பட்ட நூல் என மூன்று புத்தகங்களை படித்திருக்கிறார். அவர் காந்தியின் கொள்கைகள் பற்றி அம்பேத்கர் எழுதியதையும் படித்திருந்தால் இன்னும் பயன்பட்டிருக்கும்.
 கிஸுகி இந்நூலில் எழுதியுள்ள சிறுகுறிப்பில் காந்தியை அறியும் போது அவர் தனது பெற்றோர்க்ளை நினைவுபடுத்தியதாய் குறிப்பிடுகிறார். அவரது போதனைகள் அன்றாட வாழ்வுக்கு பயன்படாதவை என அவர் ஆரம்பத்தில் நினைக்கிறார். இந்த கருத்து நமக்கு வேறுநாட்டை சேர்ந்த புதுதலைமுறையினர் காந்தியை படிக்கையில் எப்படியான சித்திரத்தை பெறுவார்கள் என புரிய வைக்கிறது. ஜப்பான் அமெரிக்காவை போன்றே நவீனமயமாக்கலையும் நகரமயமாக்கலையும் தீவிரமாய் ஏற்றுக் கொண்ட நாடு. இப்போது அங்கு எந்த பாரம்பரிய நம்பிக்கைகளை அந்நியமாய் பார்க்கும் ஒரு தலைமுறை உள்ளது. அவர்களுக்கு காஸ்மோபொலிட்டன் நுண்ணுணர்வுடன் முராகாமி எழுதுவது தான் பிடித்திருக்கிறது. அதனால் காந்தி அந்நியமாய் தோன்றுவதில் வியப்பில்லை.
குறிப்பின் முடிவில் தன்னை மிகவும் கவர்ந்த காந்தியின் புகைப்படம் ஒன்றை பற்றி குறிப்பிடுகிறார். காந்தி அதில் ஒரு குழந்தையை கையில் ஏந்தி ஒரு குழந்தையை போல் பொக்கைவாயால் சிரிக்கிறார். எப்போதும் நமக்கு ரொம்ப சீரியசாய் யோசிப்பவராய் முரண்டுபிடிப்பவராய் தோன்றுகிற காந்தியும் குழந்தையை கையில் வாங்கும் போது மற்றொரு குழந்தை ஆகி விடுகிறார். மொத்த நூலையும் விட இந்த குறிப்பு ஆழமாய் இருந்தது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...