Skip to main content

மோடியும் யாகூப்பும்

ஏன் மதக்கலவரம் நடத்திய மத,சாதிய பெரும்பான்மைவாதிகளுக்கு தூக்குத்தண்டனை அளிக்கப்படவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள். ஏன் யாகூப்பும் கலவரக்காரர்களும் ஒரே தட்டில் வைத்து பார்க்கப்படுவதில்லை?


இரண்டு விசயங்கள்

 1) பாகிஸ்தான் துணையோடு நடத்தப்பட்ட மும்பை வெடிகுண்டு தாக்குதல் தேசத்திற்கு எதிரான போராக கருதப்படுகிறது. இது போன்ற குற்றங்களுக்கு நீதிமன்றம் தூக்குத்தண்டனை அளிக்க தலைப்படுகிறது. ஆனால் மதக்கலவரங்களை நடத்துபவர்களை இதே போல் நடத்துவதில்லை. நாம் எதிர்காலத்தில் மதக்கலவரக்காரர்களை தேசத்துரோகிகளாய் கருதும் சட்டம் ஒன்றை கொண்டு வர முயலலாம். அப்போது நீங்கள் கேட்கும் நியாயமான கேள்விக்கு விடை கிடைக்கும்.


2) சீக்கியர்களை கொன்ற காங்கிரஸுக்கும் இஸ்லாமியரைக் கொன்ற பா..கவுக்கு மக்கள் ஏன் திரும்பத் திரும்ப ஓட்டளித்தனர்? என்னைப் பொறுத்தவரையில் இத்தேர்தலில் பா..கவுக்கு ஓட்டளித்தவர்கள் ஒவ்வொருவரும் குஜராத் படுகொலைகளுக்கு பொறுப்பு தான். இக்கோணத்தில் யோசிக்க ஏன் தயங்குகிறீர்கள்? ஏன் கட்சிகளையும் தலைவர்களையும் சாடி விட்டு திருப்தியாகிறோம்? ஓட்டளித்த மக்களை என்ன செய்வது? ஆக இது நம் ஜனநாயகத்தின் பிரச்சனையும் தான். இந்திய சட்டங்களை உருவாக்கியவர்கள் இச்சிக்கல்களை கருத்தில் கொள்ளவில்லை. அடுத்த தேர்தலில் எல்லாருக்கும் வாய்ப்புள்ளது. அதை பயன்படுத்தி மக்களே தண்டனை அளிக்கலாமே? ஏன் செய்ய மறுக்கிறார்கள்? இந்தியாவின் பெருவாரியான குடிமகன்களின் அடிமனதில் சிறுபான்மையினர் மேல் கடுமையான வெறுப்பும் வன்மமும் உள்ளது. அவர்கள் மறைமுகமாய் இக்கலவரங்களை ஆதரிக்கிறார்கள். அதனால் தான் கலவரங்களை நடத்தி ஆயிரக்கணக்கானோர் சாக காரணமாய் இருந்தவர்களை ஓட்டளித்து பதவியில் அமர வைக்கிறார்கள். இந்த வன்மத்தின் அடிப்படையை களைவது பற்றி யோசிக்க வேண்டும். ஒரு கருத்தில் இருந்து தான் பெரும் குற்றங்கள் நிகழ்கின்றன. அக்கருத்தை வேரறுக்க வேண்டும். அத்வானிகளும் மோடிகளும் அக்கருத்தின் வெறும் புறவடிவங்கள். அவர்கள் இடத்தில் நாளை நூறு பேர் வருவார்கள்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...