இன்று மாலை 6 மணிக்கு டிஸ்கவரி
புக் பேலஸ் அரங்கில் நடக்க இருக்கும் செவ்வி கூட்டத்தில் நான் டி.டி ராமகிருஷ்ணனின்
பிரான்ஸிஸ் இட்டிக்கோரா நாவல் பற்றி பேச இருக்கிறேன். இரண்டு விசயங்களை முன்னிலைப்படுத்த
இருக்கிறேன். ஒன்று சாருவின் தாக்கத்தால் இந்நாவலுக்கு விளைந்த கேடு. இன்னொன்று மெட்டாபிக்ஷன்
படைப்பாய் இந்நாவல் உருவாகி வந்துள்ள விதம். தமிழில் இத்தகு முயற்சிகள் நடந்தனவா என்பது
பற்றியும் பேச விருப்பம். இதே நாவல் பற்றி சந்திராவும், லைம்லைட் நாவல் பற்றி யுவகிருஷ்ணாவும்
பேச இருக்கிறார்கள். நண்பர்கள் அவசியம் கலந்து கொள்ளவும்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share
