Skip to main content

“ரசிகன்” – அபத்தங்களின் நாயகன் - பா.சரவணன்


மனிதர்களுக்கும் வாழ்க்கைக்கும் இடையே நடக்கும் சூதாட்டத்தில்ரம்மிசேர்ந்துவிடாதபடி மனிதர்கள் வாழ்க்கையையும், வாழ்க்கை மனிதர்களையும் கலைத்துப்போட்டுக்கொண்டே இருக்கின்றன இந்த நாவலில்.

இரண்டுக்கு மேற்பட்ட இளைஞர்கள் வரும் இடங்கள் மிகத் துள்ளலுடன் எழுதப்பட்டிருக்கின்றன. பெண்கள் வேறுபட்ட பின்ணணியும் குணங்களும் கொண்டவர்களாகவும் , சிக்கலான நேரங்களில் தங்கள் கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப நடந்துகொள்பவர்களாகவும் இருக்கின்றனர்.
மதம்மாறித் திருமணம் செய்தல், சரிவிலிருப்பவனைக் காதலித்தல் எனச் சிலசினிமாத்தனமானசூழல்கள் மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளின் பின்னால் ஓடாமல், நிதானத்துடன் நகர்வது குறிப்பிடத்தக்கது .சாதிக்கின் சிறு பத்திரிகை அனுபவம், ‘கதைசொல்லிசங்கரின் பத்திரிகை அனுபவம் போன்ற இடங்கள் தகவல்களின், செய்திகளின் தொகுப்பாக மட்டும் நின்றுவிடுகின்றன. போதையுடன் நிகழும் சில உரையாடல்கள் நீண்டுகொண்டே போவது போன்ற உணர்வைத் தருகின்றன.
ரசிகர் மன்றச் செயல்பாடுகளில் நடிகரின் (ரஜினி) பெயரைப் பயன்படுத்தியிருப்பதை (நடிகரைப் பற்றி எதிர்மறையாக அதிகம் சொல்லாவிட்டாலும்) துணிச்சலான செயல் என்றே சொல்லவேண்டும்.
இடதுசாரிகள் , சிறுபத்திரிகைச் சூழல் குறித்த பல இடங்கள் திட்டமிடப்பட்டு எழுதப்பட்டிருக்கின்றன ( Premeditated shot). அவ்விடங்களில் பந்துபௌண்டரிக்குச் செல்லவில்லை.
நாவலின் வடிவத்தில் நண்பர்களில் வாழ்க்கை , இடதுசாரி/சிறுபத்திரிகை அறிவுச்சூழலின், மனிதர்களின் வீழ்ச்சி , தற்கால ஊடகங்களின் தாக்கம் என்ற மூன்று கதைகள்கொலாஜ்செய்யப்பட்டிருப்பது போல் இருக்கிறது. இது நாவலுக்கு பலமாகவும், சில இடங்களில் பலவீனமாகவும் ஆகிறது. அதிர்ச்சியூட்டக்கூடிய சில இடங்களில்டரண்டினோபடம் பார்ப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகின்றது.
மக்களை விட்டு விலகி மேட்டிமைத்தனமான இதிகாசங்கள்,இற்றுப்போன சுயபுனைவுகள், பாவனைகள் மிகுந்த உணர்வுகள் பொங்கி வழியும் சொற்குவியல்களின் பின்னால் மூத்த தலைமுறை (உரைநடை எழுதும் ) இலக்கியவாதிகள் சிலர் திரியும்( Pun intended!) நிலையில், கடந்த ஐந்தாண்டுகளில் தன்னைச் சுற்றியுள்ள மக்களை , வாழ்க்கையைப் பேசும் புதிய (‘இளம்அல்ல) எழுத்தாளர்களின் பல நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. அந்த வரிசையில் மனிதர்களின் சீரழிவின் வாயிலாக சமூகத்தின் வீழ்ச்சியைப் புனைய முயன்றிருக்கிறது ஆர்.அபிலாஷ் எழுதியரசிகன்’.
ரசிகன் (நாவல்) – ஆர்.அபிலாஷ் , உயிர்மை வெளியீடு


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...