Skip to main content

ரோஹித் ஷர்மாவின் அணித்தலைமை

Image result for rohit sharma ipl

நேற்றைய .பி.எல் ஆட்டத்தில் மும்பை அணிக்காக ரோஹித் ஷர்மாவின் தலைமை அற்புதம். குறிப்பாய் கள அமைப்பு. 170 இலக்கை விரட்டிக் கொண்டிருந்த கொல்கொத்தா அணியின் சூர்யகுமார் யாதவுக்கு கால் பக்கம் பந்தை flick செய்து சிக்ஸர் அடிக்கப் பிடிக்கும். இதை உணர்ந்து ரோஹித் சரியாக டீப் மிட்விக்கெட்டில் தடுப்பாளரை வைத்திருந்தார். யாதவ் அப்பொறியில் கச்சிதமாய் வீழ்ந்தார். அதே போல் மலிங்காவின் ஓவரில் மெதுவான பந்துகளை கணித்தாட முடியாமல் பியுஷ் சாவ்லா திணறுவதைக் கண்ட அவர் ஆடுதளத்தின் மெத்தனத்தன்மையை கணித்து இறுதி ஓவரை பகுதிநேர மெதுவேக வீச்சாளர் கயரன் பொலார்டுக்கு அளித்தார். முதல் பந்தில் யூசுப் பதான் வெளியேற நான்கு பந்துகளில் ஒன்றைக்கூட சாவ்லாவால் அடிக்க இயலவில்லை. ஒரே ஒரு பந்து பந்தின் கீழ்விளிம்பில் பட்டு மோசமான களத்தடுப்பு காரணமாய் நான்கு ஓட்டங்கள் போனது தவிர வேறு பாதிப்பு இல்லை.


ரோஹித்திற்கு ஆட்டத்தின் போக்கு பற்றின ஒரு சரியான புரிதல், ஒருவித ஆட்ட உணர்வு, புத்திசாலித்தனம் எல்லாம் உள்ளது. வேகமாய் முடிவெடுக்க முடிகிறது. புத்திசாலித்தனமாய் களம் அமைக்கிறார். மூத்த வீரர்களை ஒருங்கிணைப்பதும் சிறப்பு. தேவையின்றி பதற்றமாகிறார் என்பது மட்டும் தான் சிறு குறை. எதிர்காலத்தில் இந்திய அணித்தலைவராக அவருக்கு நிச்சயம் வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்.


இவ்வளவும் எழுதுகிற போதும் நேற்றைய ஆட்டத்திற்கு சூதாட்ட சம்மந்தமுள்ளதோ என ஐயம் எழாமலும் இல்லை.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...