Skip to main content

ஒரு நாடகம் முடிவுக்கு வருகிறது


ஐந்து தமிழக மீனவர்களை இலங்கை ஹெராயின் கடத்தல் போன்ற குற்றத்துக்கு வழக்கத்துக்கு மாறாக தூக்குத்தண்டனை விதித்தபோதே இது ஒரு நாடகம் எனும் சந்தேகம் தோன்றியது. இந்தியாவை சற்று மட்டம் தட்டவும், இலங்கையில் வாக்காளர்களிடம் நல்ல பெயர் வாங்கவும், மோடி அரசுடன் பேரம் பேசவும் இந்த தண்டனையும் இப்போதைய விடுதலையும் ராஜபக்சேவுக்கு உதவியது. ஒரே கையெழுத்தில் ஐவரையும் விடுவிக்க அதிகாரம் கொண்ட ராஜபக்சே ஏன் அதற்கு தன் பிறந்த நாள் வரும் வரை காத்திருக்க வேண்டும்?

மனித உயிரை வைத்து பகடையாடுவதில் இந்த அரசியல்வாதிகளுக்கு தனி கிளுகிளுப்பு தான். இதன் மூலம் ராகபக்சே தான் இந்தியாவையே மிரட்டி கெஞ்ச வைக்க தயங்காத ஆள் என தன் வாக்காளர்களுக்கு நிரூபித்திருக்கிறார். தமிழக மீனவர்கள் எல்லை கடந்து மீன் பிடிப்பதனால் எரிச்சலாகி உள்ள இலங்கை மீனவர்களையும் தற்காலிகமாய் திருப்திப் படுத்தி இருக்கிறார். அதேவேளை இந்தியாவின் முன் அடி பணியாமல் அதன் தோளிலே கையிட்டு இலங்கை ஒரு நட்பு நாடு என சேதி விடுக்கவும் செய்து விட்டார்.
இந்த சாக்கில் அடிவாங்கின கைப்புள்ளையான மோடியை புகழ்ந்து கொண்டாட சிலர் களமிளங்கி இருப்பது தான் வேடிக்கை. “தமிழக மீனவர் பிரச்சனையை சுமூகமாக தீர்த்ததற்காக மோடிக்கும் ராஜபக்சேவுக்கும் நம் தேசம் நன்றி தெரிவிக்கிறதுஎன சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார். ஒரு வெளியுறவுத் துறை பேரத்துக்காக ஐவரின் உயிரும் நாடகமாக்கப்பட்டிருக்கிறது என்பது போக இதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது? நியாயமாக பார்த்தாலும், ஐவருக்கும் முதலில் தூக்குத்தண்டனையே விதித்திருக்க கூடாது. நீதித்துறை, ராணுவம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கட்டுப்படுத்தும் ராஜபக்சே தான் தூக்குத்தண்டனை தீர்ப்பின் பின்னாடி இருந்திருக்கிறார் என்பது தெளிவு. இப்போது அவரே தான் “கொண்டு வந்த” தீர்ப்பை ரத்து பண்ணியிருக்கிறார். “முதல்வனில்” ரகுவரன் சொல்வது போல் “இவரே பாம் வைப்பாராம். இவரே போய் கரெக்டா எடுப்பாராம்”.

இந்த விசயத்தில் மோடியை கொண்டாடுவது தான் வேடிக்கை. என்னாவாக இருந்தாலும் மோடியை விட ராஜபக்சே மேல். மோடியை விட அவர் பத்து மடங்கு ஆட்களை கொன்றிருக்கிறார். அவர் அளவுக்கு போக இவர் இன்னும் பல படிகள் ஏற வேண்டும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...