Skip to main content

அலி முர்த்தாஸா: கவனிக்க வேண்டிய சுழலர்


நேற்று செண்டிரல் மற்றும் சவுத் ஸோன் அணிகள் இடையிலான துலீப் கோப்பை போட்டியின் இறுதி நாள். சவுத் ஸோனுக்கான வெற்றி இலக்கு 301. அவர்கள் 203க்கு ஒரு விக்கெட் இழந்திருந்தனர். ஆனால் பின்னர் விக்கெட்களை வேகமாய் இழந்து சொற்ப எண்களில் ஆட்டம் இழந்தனர். மிக பரபரப்பான ஆட்டமாக இருந்தது. நேற்றைய இந்திய-இலங்கை ஒருநாள் ஆட்டத்தை விட சுவாரஸ்யமான ஆட்டம். அலி முர்த்தாஸா எனும் இடது கை சுழலரை ஐ.பி.எல்லில் பார்த்திருப்பீர்கள். ரொம்ப தட்டையாக ஆனால் கூர்மையாக வீசுவார். எனக்கு அவரை இதனாலே பிடிக்காது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் அவர் மிக அழகாக வீசினார். ஒவ்வொரு பந்தையும் பிளைட் செய்தார். காற்றில் மிதக்க செய்தார். கையில் இருந்து நேர் கீழாக பந்தை விழ வைக்காமல் சில இஞ்சுகள் கைக்கு மேலே எழ விட்டு சுழன்று மட்டையாளனை நோக்கி வரச் செய்தார். இது மட்டையாளனை குழப்பியது. ரொம்பவெல்லாம் இல்லை. கொஞ்சமாக தான் பிளைட் செய்தார். ஆனால் அது போதுமாக இருந்தது. மட்டையாளர்கள் பந்தின் நீளத்தை கணிக்க முடியாமல் திணறினர். 


முர்த்தாஸாவின் பந்து வீச்சு பாணி பாகிஸ்தானிய சுழலர்களை நினைவு படுத்துகிறது. அவரது உடல் மொழியின் வன்மமும் என்னை கவர்ந்தது. இந்த ஆட்டத்தில் அவர் மொத்தமாய் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முர்த்தாஸா உத்தர் பிரதேச அணியை சேர்ந்தவர். ஐ.பி.எல்லில் மும்பை இந்தியன்ஸ், பூனே வாரியர்ஸ் ஆகிய அணிகளுக்கு ஆடியுள்ளார். ஆனால் ஐ.பி.எல்லில் நாம் காணுகிற முர்த்தாஸா அல்ல உள்ளூர் நான்கு நாள் ஆட்டங்களில் காண்பவர். அவர் அம்பி. இவர் அந்நியன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...