Skip to main content

ரோஹித்தின் 264: ஒரு அற்புத சதம்


இலங்கைக்கு எதிரான ரோஹித் ஷர்மாவின் 264 வெடிமருந்து கிடங்கு வெடித்தது போன்ற ஒரு இன்னிங்ஸ். பந்தை இப்படி இவ்வளவு சரளமாக கூர்மையாக சரியான இடங்களில் தொடர்ந்து யாரும் அடித்து பார்த்ததில்லை. அதுவும் அவர் சதம் அடித்த பின்னரும் தொடர்ந்து கவனமாய் ஆனால் மூர்க்கமாய் ஆடியது கவர்ந்தது. 50 ஓவர்கள் நின்றாடுவது சாதாரண விசயம் அல்ல. மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வலுவாக இருக்க வேண்டும். அதன் பிறகு ரோஹித் களத்தடுப்பு செய்ய வேறு வருகிறார். பாய்ந்து பந்துகளைத் தடுக்கிறார். தன்னை மிக வலுவாக நிரூபித்திருக்கிறார் ரோஹித்.

ஆரம்ப 50 ஓட்டங்களை அவர் எடுத்த விதம் இன்னும் அதிகமாய் கவர்ந்தது. முன்பெல்லாம் அவர் 30 ஓட்டங்கள் எடுத்ததும் தன்னிச்சையாக சிரமமான ஷாட்களை ஆடப் பார்ப்பார். தன் திருப்திக்காக அடிக்க முயன்று வெளியேறுகிறார். இன்று அப்படி அல்ல. அவருக்கு ஒரு தெளிவான திட்டம் இருந்தது. ஒரு நான்கு அடித்து விட்டு அடுத்த பந்தை தடுத்தாடினார். அடுத்ததை ஒற்றை ஓட்டத்திற்கு விரட்டினார். இந்த நிதானத்தை நான் முன்பு ரோஹித்திடம் பார்த்ததில்லை. இது ஒரு ஆக்ரோசமான தன்னெழுச்சியிலான சதம் அல்ல. கங்குலி உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராகவும், சயித் அன்வர் இந்தியாவுக்கு எதிராகவும் அடித்தார்களே அது போன்ற திட்டமிட்ட புத்திசாலித்தனமான சதம் இது. புல்டோசர் கொண்டு பகுதி பகுதியாக ஒரு கட்டிடத்தை தகர்ப்பது போல் ஒரு எதிரணியை தகர்க்கிற சதம் இது. இதே போன்று அவர் இனி வரும் எல்லா ஆட்டங்களிலும் நான்குகளும் ஆறுகளும் விளாச வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பல்ல. ஆனால் இதே கட்டுப்பாடு மற்றும் திட்டமிடலுடன் அவர் ஆட வேண்டும் என எதிர்பார்க்கிறேன். பார்ப்போம்.
இந்த சதத்திற்கு இன்னொரு முக்கியத்துவம் உண்டு. விராத் கோலி, தவான் போன்றோர் சதம் அடிக்கையில் மைதானத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் இலக்காக்கி அடிப்பார்கள். குறிப்பாக கோலி ஸ்கொயர் கட் ஆடவே மாட்டார். ஆனால் ரோஹித் இன்று அடிக்காத இடமே இல்லை. அவர் களத்தடுப்பாளர்களுக்கு இடையே சரியாக துல்லியமாக தொடர்ந்து அடித்த விதம் மிகவும் கவர்ந்தது. ஒரு கட்டத்தில் அவர் நல்ல பந்துகளைக் கூட எளிதாக நான்குகளுக்கு தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்க ஆட்டம் ரொம்ப குழந்தைத்தனமாக பட்டது.
இலங்கை பந்து வீச்சாளர்கள் ஒரு தவறு பண்ணினார்கள். ரோஹித் மற்றும் கோலிக்கு குச்சிக்கு வெளியே, அதாவது கற்பனையான ஐந்தாவது குச்சியில் வைடாக வீசினால் பந்தை சரியாக விரட்ட வராது. சமநிலை இழந்து விடுவார்கள். இந்த பலவீனத்தை இலங்கை சரியாக சோதிக்கவில்லை. அவர்கள் இருவருக்கும் பிடித்த மாதிரி நேராக பந்தை வீசினார்கள். அதற்கு இன்னொரு காரணம் அந்த வைடான லைனில் வீசி அவர்களை சோதிக்கும் தன்னம்பிக்கை இலங்கை வீச்சாளர்களுக்கு இன்று இல்லை என்பது.

வாழ்க்கையில் நான் மிக அதிகமாக வெறுத்த மட்டையாளர் ரோஹித் ஷர்மா. ஆனால் நாம் மிக அதிகமாக வெறுக்கிற ஒருவரை உள்ளூர ரொம்ப நேசிக்கிறோம் என இன்று புரிந்து கொண்டேன்.


எப்படியோ விவரிக்கவே முடியாத ஒரு அபார இரட்டை சதத்தை பார்க்க உதவிய இலங்கை வீரர்களுக்கு நன்றி!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...