Skip to main content

இந்தியா அடுத்த உலகக் கோப்பை வெல்லுமா?


இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றியை ஒட்டி சச்சின் இந்திய அணியால் அடுத்த உலகக் கோப்பையை வெல்ல முடியும் என கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் மட்டையாட்டம் வலுவானது. பந்து வீச்சு சுமார். களத்தடுப்பு செம கூர்மை. ஆனால் உலகக் கோப்பை ஒரு நீண்ட தொடர். அதில் தொடர்ந்து நன்றாக ஆட வேண்டும். எல்லாவிதமான பந்து வீச்சுகளையும் சமாளிக்க வேண்டும். தொடர் முழுக்க நன்றாக ஆடி விட்டு ஒரு ஆட்டத்தினால் இறுதி சுற்றுக்கு போக முடியாத அணிகள் உண்டு.

போன உலகக் கோப்பையின் போதும் இதே போல் தென்னாப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியா வெல்லும் என்றார்கள். இரண்டுமே பிரமாதமாய் பந்து வீசின. ஆனால் போக போக எரிபொருள் தீர்ந்து புகை விட்டன. எனக்கு இலங்கை மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. அவர்கள் இறுதிச் சுற்றில் அழுத்தம் தாளாமல் சட்டென ஸ்தம்பித்தார்கள். மேலும் அணித்தேர்விலும் தவறு பண்ணினார்கள். பாகிஸ்தான் வழக்கம் போல் எப்போது கழன்று விழுந்தார்கள் என தெரியாதபடி காணாமல் போனார்கள். ஆனால் இந்த நான்கு அணிகளுமே உலகக் கோப்பைக்கு முன் அட்டகாசமாய் ஆடி வந்தார்கள். ஆனால் ஒரு நீண்ட ஆட்டத்தொடரில் இந்த சமீபத்திய ஆட்டநிலை எல்லாம் எடுபடாது.
இரண்டு விசயங்கள் வேண்டும். சிறந்த தலைமை. அது இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கையிடம் உள்ளது. மெல்ல மெல்ல ஆட்ட உச்சத்தை அரை இறுதியின் போது அடைய வேண்டும். போன உலகக் கோப்பையில் அதை இந்தியா செய்தது. இரண்டு அல்லது மூன்று வீரர்கள் தொடர்ந்து ஜொலிக்க வேண்டும். 92 உலகக் கோப்பையில் இம்ரான், இன்சமாம், 96இல் அரவிந்தா, ஜெயசூர்யா போல. போன உலகக் கோப்பையில் கூட யுவ்ராஜும் சஹீரும் தொடர்ந்து அணியை காப்பாற்றினார்கள். இந்த தொடர் ஆட்டநாயகன்கள் உலகக் கோப்பையில் ரொம்ப முக்கியம். இந்தியாவுக்கு இம்முறை அப்படி ஆட யார் இருக்கிறார்கள்?அதுவும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில்?
துள்ளலான ஆடுகளங்களில் ரெய்னா எப்படி ஆடுவார் என உறுதியாக தெரியவில்லை. கோலி நன்றாக ஆடினால் நல்லது. ரஹானே கூட ஆடலாம். ஆனால் நாம் ஒட்டுமொத்தமாக எல்லா மட்டையாளர்களின் பங்களிப்பையும் நம்பி இருக்கிறோம் எனலாம். போன தடவை போல் அனுபவமுள்ள நட்சத்திரங்கள் இந்த அணியில் இல்லை. பந்து வீச்சில் ஒருவர் கூட இல்லை.
ஆக இந்தியா முற்றிலும் வேறு விதத்தில் ஒருமித்த அணியாக தொடர்ந்து நன்றாக ஆட வேண்டும். 96இல் இலங்கை ஆடியது போல். அது தான் ஒரே வாய்ப்பு. மனதளவில் திணறாமல் இருந்தால் தென்னாப்பிரிக்க நிச்சயம் வெல்லலாம். உலகின் சிறந்த மட்டையாட்ட அணி அவர்களுடையது. ஆஸ்திரேலியாவின் மட்டையாட்டமும், ஒருநாள் வடிவில் பந்து வீச்சும் சுமார் தான். அதனால் அவர்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கவில்லை. நியுசீலாந்த் கூட நன்றாக ஆட வாய்ப்புண்டு. ஆனால் ஒரு பெரிய தொடரை வெல்லும் தன்னம்பிக்கையும் அனுபவமும் முக்கியம். அது அவர்களிடம் இல்லை. இலங்கை, பாகிஸ்தான் இரண்டின் பந்து வீச்சும் நன்றாக உள்ளது; ஆனால் மட்டையாட்டம் மழைகாலத்தில் அப்பளம் போல் இருக்கிறது. இங்கிலாந்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். இம்முறை உலகக் கோப்பை ஒருமாதிரி சமநிலையாய் சராசரியாய் போகும் என நினைக்கிறேன். ஏனென்றால் தென்னாப்பிரிக்கா தவிர பிற அணிகள் ஒரே போல் இருக்கின்றன.

ஒவ்வொரு முறையும் உலகக் கோப்பை சொல்லித் தரும் பாடம் எதையும் ஊகிக்க கூடாது என்பது. என்னதான் காதலன் என்றாலும் கல்யாணம் ஆனதும் கணவன் அல்லவா! அது போல் என்னதான் நன்றாக/மோசமாக ஆடியிருந்தாலும் உலகக் கோப்பைக்குள் நுழைந்ததும் அணிகள் மாறி விடும். வேறு ஏதோ ஒரு மேஜிக் நிகழும். பார்ப்போம்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...