Skip to main content

உம்மத்


சர்மிளா சய்யதின்உம்மத்நாவல் படிக்கும் போது இது என் பாணி எழுத்து என மனதில் சட்டென பட்டது. அவரது  பொறுமையாய் நிதானமாய் மனதின் போக்குகளை படம் பிடிக்கும்விதமாய் கதை சொல்லும் விதம் பிடித்திருக்கிறது. இவ்வகை நாவல்கள் இப்போது அருகி விட்டன.


ஒரு கதையை விறுவிறுப்பாய் வேகமாய் சொல்ல வேண்டும் எனும் வணிக பாணி இன்று இலக்கிய, இடைநிலை நாவல்களில் வேரூன்றி உள்ளது. பல நாவல்கள் ஒரு சின்ன நீண்ட கதையை போல் உள்ளன. சில நாவல்கள் சினிமா திரைக்கதை போல் உள்ளன. ஆனால் நாவல் என்பது மனதின் பல்வேறு விரியும் தன்மைகளை படம் பிடிக்கும் எழுத்துவகை. ஆக அது இயல்பாகவே முடுக்கி விட்ட பொம்மைக்கார் போல் ஓடாது. பொறுமையாய் சென்னை டிராபிக் போலத் தான் நகரும். ஆனால் நிச்சயம் அலுப்பு தட்டாது. ஒரு நல்ல நாவலுக்கு சாவகாசமான தளர் ஓட்டம் முக்கிய குணம். அப்போது தான் நின்று நிதானமாய் கவனித்து பதிவு பண்ண இயலும். ”உம்மத்சரியான வேகத்தில் எழுதப்பட்டுள்ளது பிடித்திருக்கிறது. இயல்பாகவே இப்படியான நாவல்கள் பேஸ்புக், இணைய பயனர்களின் அதிரடி பரபரப்பை தூண்டாது. ஆனால் நாவல் என்பது இணையத்தில் ஆவி பறக்க அள்ளித் தின்பவர்கள் மட்டுமே படிக்கிற வஸ்து அல்லவே! இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் வெளியே! எப்போதுமே வெளியே இருப்பவர்கள் தாம் என்னைப் பொறுத்தவரையில் முக்கியம்.
ஸ்ர்மிளா சய்யித் ஏற்கனவே கவிஞர் என்பதால் அவரது உரைநடைக்கு ஒரு தனி அழகு கூடியிருக்கிறது. அங்கங்கே வழுக்குத் தரை போல் தோன்றினாலும் பொதுவாக மனதை மீட்ட வைக்கும் மொழி அவருக்கு கை கூடியிருக்கிறது. அவரது நாவல் தொடர்ந்து மனதை பற்றி பேசுகிறது என்பது எனக்கு பிடித்த இன்னொரு விசயம். இன்று புற உலக நாவல்கள் அதிகமாகின்றன. அதில் தவறில்லை. இத்தகைய நாவல்கள் சிலவேளை வெறும் பத்திரிகை அறிக்கைகளின் தொகுப்பு போல் ஆகின்றன. ஈழப்போர் பற்றின அறிக்கை நாவல்களும் வரலாம். ஆனால் ஈழப்போரில் சம்மந்தப்பட்ட சில பெண்களின் மன வாழ்க்கையை பேசுவதும் முக்கியம் தான்.  
“உம்மத்” படிக்கும் போது அறுபதுகளில் இங்கு எழுதப்பட்ட நாவல்கள், மொழியாக்க ரஷ்ய நாவல்கள் நினைவு வருகின்றன. நாம் மெல்ல மெல்ல இழந்து வருகிற ஒரு நாவல் வகையை மீட்டு வருகிறார் ஸர்மிளா.

இன்னொரு சந்தர்பத்தில் “உம்மத்” பற்றி இன்னும் விரிவாக எழுதுகிறேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...