Skip to main content

காதல் 20 டாலர்கள், முதல் கால்வாசி மைல் தூரம் - கென்னத் பியரிங்


சரி தான். நான் உன்னிடமும், உன்னைப் பற்றியும் பொய் சொல்லி இருக்கலாம்
பொத்தாம் பொதுவாய் சில விசயங்கள் அறிவித்திருக்கலாம், சொல்வதானால், ஒருவேளை எல்லா பிரச்சனைகளையும் முடித்து வைக்க மறந்திருக்கலாம்,
உன் ஆர்ப்பாட்டங்களை சபித்திருக்கலாம், ரசனைகளை கேவலப்படுத்தியிருக்கலாம்,
உறவினர்களை அவதூறு செய்திருக்கலாம், உன் நண்பர்கள் சிலருக்கு
அவப்பெயர் வரும் படி பேசியிருக்கலாம்.
ஒகெ.,
இருந்தாலும், திரும்ப வந்து விடு 


வீட்டுக்கு வா. என்னைப் பற்றி சுற்றத்துக்கும் பத்திரிகைகளுக்கும் நீ
தாராளமாய் அள்ளி வழங்கிய அறிக்கைகளை மறந்திட நானும் ஒத்துக் கொள்கிறேன்,
நீ, உன் கற்பனையை, அந்த டெட்ரோயிட்டில் உள்ள பொன்வண்ண கூந்தல் கொண்ட பெண் இருக்கிறாளே, அவளை மறந்ததாய் கொள்,
நமக்கு மேல் மாடியில் வசிக்கும் உன் தோழி,
உன் பல கிராக்குத்தனமான தோழிகளைப் போலன்றி,
பைத்தியமல்ல, கொஞ்சம் புத்திசாலி தான் என நானும் ஏற்கிறேன்
அந்த பாவம் ஸ்டெயின்பெர்க் குடிகாரனோ ஏமாற்றுக்காரனோ அல்ல,
கொஞ்சம் கோணலான, ஏதோ தன் போக்கில் வாழ்ந்து போகிற எளிய மனிதன் என நீயும் ஏற்றுக் கொள்.
(கேட்கிறாயா மூதி, இது தெளிவாக புரிகிறதா உனக்கு?)

நான் உன்னை மன்னிக்கிறேன், ஆம் எல்லாவற்றுக்கும் சேர்த்து தான், என்பதால்
அழகாகவும், தாராளமாகவும் விவேகமாகவும் இருப்பதற்கும் உன்னை மன்னிப்பதால்
இன்னும் எளிதாய் சொல்வதானால், நீ உயிருடன் இருப்பதற்கே உன்னை மன்னிப்பதால்,
நீ நீயாக இருப்பதற்கே உன்னை மன்னிப்பதால்
இன்றிரவு நீ என் முடியிலும் கண்களிலும் இருப்பதால்
இந்த டாக்ஸி கடந்து போகும் ஒவ்வொரு தெருவும் மீண்டும் உன்னை, இன்னும் உன்னையே காட்டுவதால்
இன்றிரவு எல்லா இரவுகளும் கறுப்பாய் உள்ளதாய், எல்லா நாழிகைகளும் கடுங்குளிராய் இருப்பதால்
வெகு தொலைவில், இப்போது, இந்த நிமிஷம், நட்சத்திரங்கள் மிக அருகில் பிரகாசமாய் இருப்பதால்

திரும்ப வா. எல்லா கொண்டாட்டங்களையும் முடித்து வைக்க ஒரு முறை கொண்டாடுவோம் வா.
நமக்கு கீழ் குடியிருப்பில் உள்ள சவ அடக்கம் செய்வோனையும், அலுவலகத்தில் இருந்து சில நண்பர்களையும், வேறு சில நண்பர்களையும் அழைப்போம்.
அதோடு குடியை நிறுத்தி விட்ட ஸ்டெயின்பெக்கையும், மேல்மாடியில் வசிக்கும்
அந்த பைத்தியக்கார பெண்ணையும்,
ஏதாவது புது செய்தி தோன்றப் போகிறதென்றால் சில செய்தியாளர்களையும் அழைப்போம்.




Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...