Skip to main content

தீப்பந்தம் - ஹேரி கிராஸ்பை (1898-1929)

தீப்பந்தம்
-    ஹேரி கிராஸ்பை (1898-1929)

நம் காலத்தின் புரட்சி உணர்வு பற்றின உங்கள் எண்ணம் என்ன, உதாரணமாய் கம்யூனிஸம், சர்ரியலிசம், அராஜகவாதம் போன்ற இயக்கங்களில் வெளிப்படுவது போன்று?
நம் காலத்தின் புரட்சி உணர்வு என்பது (கம்யூனிஸம், சர்ரியலிசம், அராஜகவாதம் ஆகியவை வெளிப்படுத்துவது போல) ஒரு தகிக்கும் தீப்பந்தத்தை உலகின் இருட்டு லாந்தருக்குள் திணிப்பதை போல் ஆகும்.
இன்னும் ஒன்பது பத்தாண்டுகளில்
“பைத்திய ராணி” பிறப்பாள்
தரிசனம்
“பைத்திய ராணியும்” நானும் கண்களை பரிமாறுகிறோம்

கண்ணாடி என் முகத்தில் பட்டு உடைந்து
ஆயிரம் சூரியன்களாய் தெறிக்கிறது
நகரம் முழுக்க கொடிகள் பட்பட்டென வெடித்து ஒன்றோடொன்று மோதுகின்றன
மூடுபனி அபாய சங்குகள் துறைமுகத்தில் அலறுகின்றன
புயல் ஜன்னல்வழி சீறி எழுகிறது
குர்திய மேய்ப்பன்களுடன் நான் நடனமாட ஆரம்பிக்கிறேன்

தரையில் உதைத்து ஒலியெழுப்பி
சூபி ஞானிகள் போல் சுழல்கிறேன்

நிறங்கள் ஆடைகளை அணிந்தும் துறந்தும் சுழல்கின்றன
நான் வெஞ்சினத்தில் அவற்றை சொடுக்கி அடிக்கிறேன்
தூய வெள்ளை இரும்பு கருமையுடன்
கண்ணை எரிக்கும் சிவப்பு நீலத்துடன்
கடல் பச்சை பளீர் ஆரஞ்சுடன்
தங்க நிறம் மட்டுமே நிர்வாணமாய்

எழுந்து மூழ்கும் எக்கு தூண்கள்
தோன்றி மறைகின்றன
என் ஆத்மாவின் நதியை உந்துதண்டால்
மேல்நோக்கி குத்துகின்றன
கீழ்நோக்கி குத்துகின்றன
உள்நோக்கி குத்துகின்றன
வெளிநோக்கி குத்துகின்றன
துளைக்கின்றன

நான் வலியால் ஆர்ப்பரிக்கிறேன்
கருங்கால் பூனைகள் துளைகளுக்குள் மறைகின்றன

என் முதுகில் பச்சை குத்தப்பட்ட சூரியன்
சுழலத்தொடங்குகிறது
வேகமாய் இன்னும் வேகமாய்
சுழற்றியடிக்கிறது சுழற்றியடிக்கிறது
கம்பீரமாய் தீப்பொறிகளை பறக்க விடுகிறது
பொறிகள் அண்டத்துக்குள் துளைத்தேறுகின்றன
எரிகற்களுக்குள் துளைத்தேறுகின்றன
எரிகற்கள் வால்நட்சத்திரங்களுடன் மோதுகின்றன

வெடிப்புகள்
நிர்வாண நிறங்கள்
சிவப்பு பேராபத்துகளாய்
வெடிக்கின்றன

நிர்வாணமாய் ஜன்னலை உடைத்து
தாவி
பற்றிப் பரவி நிற்கும்
ஒரு ஹிலியோஸரஸ் டைனோசரஸின் மீது நின்று
ஒரு சதுர கூம்பகத் தூணைப் பிழுது
கருங்கடலின் மைப்புட்டிக்குள் திணித்து எடுத்து
ஒரு சொல்லை எழுதுகிறேன்

“சூரியன்”

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...