Skip to main content

என்னய்யா சவுண்டு அது?


உதவியாளர்: “ஐயா உங்க பொறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல வந்த தொண்டர் ஒருவர் இந்த வாழ்த்தட்டையை கொடுத்திட்டு போயிருக்கிறாரு”

தலைவர்: “என்னைப் பத்தி எதனாச்சும் புகழ்ந்து எழுதியிருக்குதா?”

உதவியாளர்: “ஒரு கேள்வி கேட்டிருக்காருங்க. எப்படி நீங்க மட்டும் இத்தன நாள் உயிரோட ஆரோக்கியமா திடமா இருக்கீங்கன்னு?


தலைவர்: ம்ம்ம் (பெருமூச்சு விடுகிறார்): அண்ணா போயிட்டார். ராமசந்திரன் போயிட்டான். ம்ம்ம் ... நான் இன்னும் இருக்கேன்.”

சின்னதம்பி கையில் பூச்செண்டுடன் வருகிறார்.

தலைவர்: “இவன் கிட்ட கேட்போம். யோவ், நம்ம தொண்டர் ஒரு கேள்வி கேட்டிருக்கார். அதைப் பத்தி நீ என்ன நினைக்கிறெ?”

சின்ன தம்பி அட்டையை வாங்கி பார்க்கிறார்.

சின்னதம்பி: “தெரியல. எனக்கு ஒவ்வொரு பொறந்த நாள் வரும் போதும் கோவமா வருது, ஆனா நீங்க சந்தோசமா இருக்கீங்க.”

தலைவர்: “நீ கடவுளை நம்புறியா?”

சின்னதம்பி: “கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும். ஆனா இப்போ கடவுள் நம்பிக்கையும் போச்சு.”

தலைவர்: “கடவுளை அதிகமா திட்டுறவன் அதிக நாள் இருப்பான். ஹா ஹா”

உதவியாளர்: “அதையே பதிலா எழுதட்டுமாங்க?”

தலைவர்: “எழுது எழுது. கூடவே கொஞ்சம் அடைமொழி எல்லாம் போட்டு பாட்டு மாதிரி எழுது” (சின்னதம்பியை பார்த்து) “தொண்டர் கேட்டதுக்கு நீ பதிலே சொல்லலியே. என்ன நினைக்கிறே?”

எங்கிருந்தோ ஒரு குரல் கேட்கிறது. பெரிய தம்பி: “நல்லவங்கள ஆண்டவன் சீக்கிரமா கூப்பிட்டிருவான். ஆனா கெட்டவங்கள...?”

தலைவர்: “யாருய்யா அது? என்ன சவுண்டு அது?”

உதவியாளர்: “எனக்கு ஒண்ணும் கேட்கலியே”

தலைவர் சின்னதம்பியிடம்: “உனக்கு கேட்டுச்சா?”

சின்னதம்பி: “நான் ஏதும் சொல்ல விரும்பல”

தலைவர்: “எல்லா ஓட்டையையும் மூடணும் சொன்னேன் இல்லியா. பண்ணுனியா நீ ?...” (சில கெட்டவார்த்தைகளை உதிர்க்கிறார்)

உதவியாளர்: “ஒரு ஜன்னல் விடாம மூடிட்டேன். காத்தே வர மாட்டேங்குது. ஏஸியை கூட மூடிட்டேன்”

பெரியதம்பி: “காது கூட ஓட்டை தான்”
தலைவர்: “யோவ் என்னய்யா சவுண்டு இது, நல்ல நாள் அதுவுமா.” (உதவியாளரை நோக்கி மேலும் சில கெட்டவார்த்தைகள் சொல்லுகிறார்)

பெரியதம்பி: “டி.வி, ரேடியோ, மக்களோட வாய்...”

தலைவர்: (சின்னதம்பியை நோக்கி): “அவனை கட்சியை விட்டு தூக்கிடு. அப்ப தான் அடங்குவான்”

சின்னதம்பி: “ஏற்கனவே தூக்கிட்டோமுங்க”

தலைவர்: “அப்பிடீன்னா நீ கட்சியே விட்டு போயிடு. அவன் கொஞ்ச நாள் உள்ளே வரட்டும். அப்போ தான் இந்த சத்தம் கேட்காம இருக்கும். எனக்கும் பொழுது போவும்” (பிறகு தனக்குள்ளே) “ராமசந்திரனுக்கு இந்த டெக்னிக்கெல்லாம் தெரியாது. தெரிஞ்சிருந்தா இன்னும் உயிரோட இருந்திருப்பான்”

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...