Skip to main content

சைட் டிஷ் பையன்



வாடிக்கையாளர் 1: “டேய் தம்பி இங்க வாடா. எவ்வளவு நேரமா கூப்பிடறது?

பையன்: என்னண்ணே? சொல்லுங்க”

வாடிக்கையாளர் 1: “நீ இல்ல நீங்க அவர் இல்ல. உங்களைத் தானே அவரு பத்திரிகை பேட்டியில தமிழின் சிறந்த எழுத்தாளர்னு சொன்னாரு. நீங்க என்ன இங்க?”

பையன் (தலையை சொறிந்தவாறு): “அதுவா அண்ணே... தலைவரு அடிக்கடி குவாட்டரோட இங்க வந்து சைட் டிஷ் இல்லாம உட்கார்ந்திருப்பாரு. நான் எல்லா டேபிள்ள இருந்தும் கொஞ்சம் கொஞ்சமா சைட் டிஷ்ஷை ஆட்டைய போட்டு தலைவருக்கு கொண்டு கொடுப்பேன். பதிலுக்கு தலைவர் எங்கிட்ட உலக இலக்கியம், உலக இசை, உலக செக்ஸ் எல்லாத்த பத்தியும் பேசுவாரு.”

வாடிக்கையாளர் 1: “தலைவருக்கு புடிச்ச சைட் டிஷ் என்னய்யா?”

பையன்: “மிக்சர்ணே”

வாடிக்கையாளர் 1: “அவரு கூட சேர்ந்து உரையாடி நீ பெரிய எழுத்தாளர் ஆயிட்டேப்பா. ஆனா நீ எழுதினது ஒண்ணத்தையும் நான் படிச்சதில்ல. நான்னு இல்ல எவனுமே படிச்சதா தெரியல. ஆனா ஊரெல்லாம் இதைப் பத்தியே பேசிக்கிட்டு கெடக்கானுவ. நீ எழுதினது எங்க வந்திருக்கு? இப்ப எதாவது எழுதி வச்சிருக்கியா?”

பையன் ஒரு கிழிந்த சிகரெட் அட்டையை காட்டுகிறான். அதன் பின்புறத்தில் “ரெண்டு சில்லி சிக்கன், ஒரு பக்கோடா, ரெண்டு பாக்கெட் மிக்சர், ரெண்டு கடலை, மூணு எம்.ஸி குவார்ட்டர், ரெண்டு பியர்” என முத்து முத்தான கையெழுத்தில் இருக்கிறது.

வாடிக்கையாளர்: “நல்ல அழகான கையெழுத்துப்பா. தலைவர் சும்மாவா உன்ன பாராட்டுவாரு. ஆனா இது மூலமா நீ என்ன சொல்ல வாறேன்னு புரியல. தலைவர் நாவல் மாதிரி ஒரே குழப்பமா இருக்கு”

பையன்: “நான் அப்பிடியெல்லாம் யோசிக்கிறதில்லண்ணே. வரவங்க கேட்கிறதை அப்பிடியே எழுதி வச்சிருவேன். சின்ன தப்பு கூட வராது. தலைவர் இதையெல்லாம் தொகுத்து நாவலா போடலாமுன்னு ஒரு பதிப்பாளர்கிட்ட கூட்டிகிட்டு போனாரு என்னை. ஆனா அவரு என்னை பார்த்ததும் யோசிக்காம ரெண்டு லார்ஜு, ஒரு ஹால்ப் தந்தூரின்னுட்டாரு. எனக்கு வருத்தமா போச்சுண்ணே

அப்போது பல திசைகளில் இருந்தும் குரல்கள்

வாடிக்கையாளர் 2: “டேய் எவ்வளவு நேரமா கூப்பிடறதுடா, வாடா இங்க”

வாடிக்கையாளர் 3: “எவண்டா அவன் த்தா மிக்சர் கேட்டு எவ்வளவு டைம் ஆவுதுடா.”

வாடிக்கையாளர் 4: “வாடா இங்க உன் மண்டைய உடைக்கிறேன். கூலிங்கா பீர் கேட்டேனா இல்லியா. இதான் உங்கூர்ல கூலிங்கா?”

வாடிக்கையாளர் 1: “நிறைய பேர் உன்னை தேடுறாங்க போல. ரொம்ப பிரபலமாயிட்டியேப்பா”

பையன் (தலையை சொறிந்தவாறு): “அதுவா அண்ணே! அந்த “பத்து கேள்விகள் பத்து பதில்களில்” தலைவர் என்னைப் பத்தி சொன்னதில இருந்தே இங்க கடையில கூட்டம் அள்ளுதுண்ணே. எல்லா வயசான எழுத்தாளர்களும் வந்து உட்காந்துகிட்டு சைட் டிஷ் கொண்டா அதை கொண்டா இதை கொண்டான்னு சாவடிக்கிறானுங்க. எத்தன பேருக்கு தான் நான் அட்டைய போட்டு சைட் டிஷ் கொடுக்கிறது” (பிறகு வெளியே பார்த்து) “டேய் இருங்கடா. என்னால சமாளிக்க முடியலடா ஸ்ஸ்ஸ்ப்பா”

வாடிக்கையாளர் 1: இதுக்கே இப்பிடி அலுத்தா எப்பிடி? உனக்கு விருது கொடுக்க போறதா வேற பேசிக்கிறாங்க...

பையன் தலைதெறிக்க ஓடுகிறான்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...