Skip to main content

இலங்கையின் தொடர் வெற்றியும் இந்தியாவின் நிலையும்


இங்கிலாந்தில் இலங்கையின் தொடர்வெற்றி எதிர்பாராதது. அதற்கு ஒரு காரணம் சங்கக்காரார், மஹிளா போன்ற சீனியர்கள் தன்னலமின்றி அணிக்காக தொடர்ந்து உழைப்பது

இன்னொன்று இலங்கையின் ஒழுக்கம் மற்றும் உழைப்பு மற்றும் அணி உணர்வு

இதை வைத்து இந்தியாவும் வென்று விடுமோ என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இலங்கை ஒரு புது அணியாக சென்றது. இந்தியா அப்படி அல்ல - வீரர்கள் .பி.எல்லால களைத்து போயிருக்கிறார்கள் - இஷாந்த், ஷாமி போன்றோர் நல்ல ஆட்டநிலையில் இல்லை. வெளிநாடுகளில் அஷ்வினின் ரெக்கார்ட் ரொம்ப மோசம். பந்தும் சுழலாது. புவனேஷ்வர் மட்டுமே நன்றாக வீசக் கூடும்.


இன்னொரு முக்கிய விசயம் இந்தியாவுக்கு எதிராக இருக்கும். நாம் எப்போதும் சராசரியாக 90-120 ஓவர்களை ஒரு இன்னிங்ஸில் வீசுகிறோம். எதிரணி நன்றாக ஆடினால் 150 ஓவர்களுக்கு மேலே. நம் வேகவீச்சாளர்கள் ஆளுக்கு 20 ஓவர்கள் வீசினதும் களைத்து விடுவார்கள். மூன்று வேக வீச்சாளர்களால் உத்வேகமுடன் 60 ஓவர்கள் தான் வீச முடியும். தோனி மூன்று வேக வீச்சாளர்களுக்கு மேல் எடுக்க மாட்டேன் என பிடிவாதம் பிடிப்பார். மிச்சமுள்ள 60-80 ஓவர்களை யார் வீசுவது? அஷ்வின்? விராத் கோலி, ரோஹித் ஷர்மா? நம் வேகவீச்சாளர்களை ஆளுக்கு 35 ஓவர்களுக்கு மேல் வீச சொன்னால் ஆர்வமின்றி குறைந்த வேகத்தில் வீசுவார்கள். அடுத்த டெஸ்டில் பலவீனமாகி இன்னும் மோசமாகி வீசுவார்கள். மூன்றாவது டெஸ்டில் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்படும்.

இது அறிந்து தோனி வேகவீச்சாளர்களை அதிகம் வீச வைக்க மாட்டார். அதனால் அவர் ஜடேஜாவை தேர்வு செய்வார். பந்து சுழலவே செய்யாத இங்கிலாந்தில் அஷ்வினும் அவரும் 50 ஓவர்களுக்கு மேல் வீசினால் ஒரு விக்கெட்டுக்கு மேல் விழாது. அந்த குறிப்பிட்ட கட்டத்தில் எதிரணி சுலபமாக 200 ஓட்டங்கள் எடுக்கும். வேகவீச்சாளர்களை ஒழுங்காக ஆடினால் இங்கிலாந்து ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 400க்கு மேல் எடுக்கலாம். 

தோனி இதை அறிவார்அவரது நோக்கம் எதிரணியை 300க்குள் சுருட்டுவது அல்ல. 500 இரண்டு நாட்களில் அடிக்க வைப்பது. அதன் பின் தம் மட்டையாட்டத்தால் டிரா பண்ணலாம் என நினைப்பார். ஐந்து டெஸ்டுகளில் 3 நாட்கள் நாம் மோசமாக மட்டையாடினால் 3-0 என்ற நிலையில் தொடரை இழப்போம். தோனியின் திட்டத்தின் சிக்கல் இது தான்.


இந்தியாவுக்கு தேவை நல்ல உடல்வலுவும் ஒழுங்கும் கொண்ட வேகவீச்சாளர்கள். களைக்காமல் 140 கி.மீ வேகத்தில் 35 ஓவர்கள் வீசுபவர்கள். அது இல்லாமல் நாம் வெளிநாடுகளில் மாங்கா அடி வாங்கிக் கொண்டே இருப்போம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...