Skip to main content

வசனகர்த்தா


காட்சி 1

மீனவன்: “ஏய் மீனே என் தூண்டில்ல மாட்டிக்கிட்டியா. நான் சாத்தான்லே. என் கிட்டயிருந்து நீ தப்பிக்க முடியாது”

மீன்: “ஐயோ என்ன விடுலே. நான் மீன். என்ன விடுலே”

மீனவன் தூண்டிலை இழுத்து படகில் போடுகிறான்.

மீன்: “நான் சாகிறேன். ஐயோ நான் துடிக்கிறேன். துள்ளுறேன்.”

மீனவன்: “ஹா ஹா நான் சாத்தான்லே. நீ சாவுறே. நான் அதை பார்க்குறேன்.”


மீன்: “ஹா நான் செத்துட்டேன்”

ஆண்டவன் தோன்றுகிறார்: “நான் ஆண்டவன்”

மீனவன்: “என்னை மன்னியுங்கள் ஆண்டவரே. நான் பாவம் பண்ணீட்டேன்”

ஆண்டவன்: “உன்னை மன்னிச்சிட்டேன். ஏன்னா நான் ஆண்டவன்”

மீனவன்: “நன்றி ஆண்டவரே. ஸ்தோத்திரம். என் பாவக்கறைகளை கழுவீட்டீங்க. நான் அடுத்த மீனுக்கு தூண்டில் போடப் போறேன். ஏன்னா நான் சாத்தான்.”

ஒரு மீன் பக்கத்து மீன்களிடம்: “வாயைத் திறக்காதீங்கடீ. இவங்கிட்ட பேசினோம் வாயை மூட மாட்டான். பேசி பேசி வாயில தண்ணீ ஏறி ஏற்கனவே ஒரு மீன் செத்து போச்சு.”

டைரக்டர்: “இவ்வளவு வசனம் வேணாம்யா. வாட் ஐ திங்க் இஸ் ஒன் ஷாட், ஜஸ்ட் ஒன் ஷாட் – அதில சீனை முடிச்சிடலாம். “மீன் தூண்டில் ஆண்டவன் ஸ்தோத்திரம்” தட்ஸ் இனப். அடுத்த கிளைமேக்ஸ் சீனை சொல்லு.”

காட்சி 2:
ஹீரோ துப்பாக்கியால் சுடுகிறான்: “நான் உன்ன சுட்டுட்டேன். குண்டு உன்னை நோக்கி வருது. இதோ வந்திருச்சு. உன் இதயத்தை துளைச்சிருச்சு. நீ சாக போறே. நீ வில்லன்லே நீ சாகப் போறே”

வில்லன்: “ப்ளீஸ் சீக்கிரம் சொல்லி முடிங்க. நான் செத்துட்டு சீக்கிரம் வீட்டுக்கு போகணும்.”

காட்சி 3
காலியான திரையரங்கு. ஒரே ஒரு பார்வையாளன் அசந்து தூங்குகிறான்.
திரை ஒளிர திடீரென ஒருவர் தோன்றுகிறார்: “வணக்கம் நான் இப்படத்தின் வசனகர்த்தா. படம் முடிந்து விட்டது. நீங்கள் போகலாம்”

பார்வையாளன் கண்ணை திருமிக் கொண்டு: “நான் இந்த படத்துக்கு டிக்கெட் வாங்கின பார்வையாளன். எனக்கு தூங்கணும்”

வசனகர்த்தா: “இந்த படத்தில் வந்த முக்கியமான படிமங்கள், குறியீடுகளை நீங்கள் கவனிக்கவில்லை என நினைக்கிறேன். உங்களைப் போன்ற பொறுப்பற்ற பார்வையாளர்களால் இந்த படம் ... உலகப்புகழ் பெற வேண்டிய... இந்த படம் தோற்று விட்டது. இனி நான் இப்படத்தில் புதைந்துள்ள ஆழமான உண்மைகளை விளக்க போகிறேன். அதாவது...”

பார்வையாளர்: “யோவ் தியேட்டர் ஓனர் புரொஜக்டரை ஆப் பண்ணுய்யா”


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...