Skip to main content

CM Cell: ஆக்கிரமிப்பும் அதன் சிக்கல்களும்




எங்கள் அபார்ட்மெண்டில் ஒருவர் அத்துமீறி நுழைந்து சதா அமர்ந்திருப்பார். எவ்வளவு கூறியும் போக மாட்டார். எங்களையே மிரட்டுவார். அப்பார்ட்மெண்ட் வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்து கட்டபஞ்சாயத்து செய்து கொண்டிருந்தார். அவருடைய குடிகார நண்பர்கள் சதா பத்து பேர் வேறு அவரை பார்க்க வந்து போய் கொண்டிருப்பார்கள். பக்கத்து கோயிலில் விழா நடந்தால் எங்கள் அப்பார்ட்மெண்டை தண்ணீர், சமையல் என அனைத்துக்கும் பயன்படுத்தி கலீஜாக்குவார்கள். அது போக விழா முடிந்த்தும் இவர்களுக்கிடையே அடிதடி எங்கள் அப்பார்ட்மெண்ட் வளாகத்திலேயே நடக்கும்.
இந்த ஆளுக்கு எதிராக cm cellஇல் (http://cmcell.tn.gov.in/) புகார் செய்தோம். எனக்கு நம்பிக்கை  இருக்கவில்லை. ஏதோ முதல்வன் பட ஸ்டைல் ஸ்டண்ட் என நினைத்தேன். ஆனால் ஒரு மாதம் கழித்து இன்று ஒரு போலீஸ்காரர் போன் செய்து உங்கள் புகார் வந்தது, நாங்கள் வந்து நடவடிக்கை எடுக்கிறோம் என்றார். வியப்பாகி விட்டது. ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு வாட்ச்மேனை குடும்பமாக குடியிருத்தினோம். அதில் இருந்து கட்டபஞ்சாயத்துகாரர் அவ்வளவாய் வருவதில்லை. ஆனால் வாட்ச்மேன் குடும்பத்தை எப்படி வெளியே அனுப்புவது என புது பிரச்சனை ஆரம்பித்துள்ளது. வாட்ச்மேன் வேலையே செய்யாமல் இடத்தை மட்டும் ஆக்கிரமித்து வருகிறார். அதனால் போலீஸ்காரரிடம் நடவடிக்கை ஏதும் இப்போதைக்கு தேவையில்லை என்று கூறி விட்டோம். புதுபிரச்சனையில் தான் எங்கள் கவனம்.
ஒன்று, இந்த இணைய புகார் மையம் வேலை செய்கிறது என்பது ஆச்சரியம் அளிக்கிறது. இது பாராட்டுக்குரியதும் கூட. ஒரு புகார் அளிக்க காவல்நிலையம் வரை போக வேண்டியதில்லை என்பதும், இணையவழி புகார் நன்றாக வேலை செய்கிறது என்பதும் நல்ல விசயம். 
இரண்டு, இதில் நகைமுரண் என்னவென்றால் இந்த அத்துமீறீ ஆக்கிரமித்து கட்டபஞ்சாயத்து பண்ணுகிறவர் ஒரு அதிமுக ஆள். தேர்தல் பிரச்சாரத்துக்கு இந்த முறை அதிமுகவின் (ஆதம்பாக்கம்) கவுன்சிலர் வந்த போது இவரைப்பற்றி புகார் சொன்னோம். தேர்தல் முடிகிற வரை ஒன்றும் பண்ண முடியாது என்று விட்டார். அதிமுகவுக்குள் உள்ள ரௌடிகளைப் பற்றி புகார் சொல்ல ஒரு தனி CM cell பிரிவு வேண்டும் போல. அதற்கு ADMK CM cell என்று பெயர் வைக்கலாம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...