Skip to main content

அந்தியின் பாடல் - கென்னத் பியரிங்




தூங்கு மக்கேட்
பகலை மடித்து வை. அது ஒரு பளீரென்ற ஸ்கார்ப் அல்லவா.
தூக்கிப் போடு அதை.
உன்னை சீட்டு கோபுரம் போல் தனித்தனியாய் கழற்றி வை.
ஒரு உயர்ந்த கட்டிட்த்தில் சாம்பல் நிற எலி ஆகிட நேரம் வந்து விட்டது.
அங்கே செல். செல் இப்போது.
பெரும் ஆணிகளைப் பார். குழாய்களுக்கு பின்னால் ஓடு.
சுவர்களில் குடுகுடுவென ஓடு.
உன்னை அழைக்கிற அப்பெண்ணிடம் ஊர்ந்து போ, அவள் முலைகள் வெதுவெதுப்பானவை.
ஆனால் இங்கே ஒரு பிரேதம். கொலைகாரன் யார்?
உன் துப்பாக்கியால் அவனைக் கொல். அவனைக் கடந்து ஊர்ந்து அப்பெண்ணிடம் போ.

உறங்கு மக்கேட்.
ஒரு கையை படுக்கையில் பக்கவாட்டில் போடு.
கைக்கடிகாரத்தை முடுக்கு.
நீ ஒரு கனவான் அல்லவா, முக்கியமானவனும் கூட.
கொட்டாவி விடு. போ தூங்கு.


சூரியனை நோக்கி மெல்ல திரும்பும் கண்டம் அமைதியாக உள்ளது.
உன் கடிகார முள் நாளைக் காலைக்காக காத்திருக்கிறது.
மேலும் நீ இன்னும் உயிருடன் இருக்கிறாய்.
உன்னைப் புதைப்பதற்கு இன்னும் ரொம்ப காலம் இருக்கிறது.
எப்போதோ, ஆனால் இப்போது அல்ல.
எப்போதோ நிகழும் தான், எப்போதோ, அது உறுதி.

உன் மூளையை உதிரி உதிரியாய் பிரி,
அதில் பசித்த உன் வாய்களை மூடு,
ரொம்ப நாளாய் உணவு ஊட்டப்பட்டாயிற்று.
இப்போது தூங்கு, நீ ஒரு கனவான் அல்லவா. மக்கேட், உயிருடன், மனசமநிலை இழக்காமல்.
சமூகத்தில் உயர்ந்த இடம் கொண்ட ஒரு கனவான்.
சீமாட்டியைப் பார்த்தால் உன் தொப்பியை சரித்து மரியாதை தெரிவி.
மேயரிடம் பேசு.
நீ மேயரின் நெருங்கிய நண்பன் அல்லவா?
உண்மை. மேயரின் நண்பன்.
ரோமானியாவின் அரசியை சந்தித்தாய் அல்லவா. உண்மை.

சரி நீ தூங்கு.
பழைய சூரியனின் கீழ் உறங்கும் நாயாக இரு.
ஆப்பியன் வேயில், பழைய சூரியனின் கீழ் சோம்பிக் கிடக்கும் பூடில் நாயாக இரு.
புல்வெளியில் படுத்தபடி கடந்து செல்லும் ராணுவ வீர்ர்களை வேடிக்கைப் பார்க்கும் நாயாக இரு.
அழைக்கிற பெண்ணின் பின்னால் ஓடு.
வாள் ஏந்திய காவலரைப் பார்த்தால் ஓடித் தப்பு. அது உன் எலும்புகளை நொறுக்கிடும்.
பெரும் அச்சம் கொள்.
ஐந்தாவது அவென்யுவில் உள்ள நடைபாதையில் பழைய சூரியனுக்கு கீழ்
சுருண்டு சோம்பித் தூங்கு.
தூங்கு மக்கேட்.
கொட்டாவி விடு.
தூங்கு.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...