Skip to main content

கேஜ்ரிவாலுடன் ஒரு உரையாடல்




நிருபர்: “தனித் தமிழ்நாடு கோரிக்கையில் உங்களுக்கு பிரச்சனையில்லை என உங்கள் கொள்கை அறிக்கையில் கூறியிருக்கிறீர்களே?”
கேஜ்ரிவால்: “ஆம் மக்கள் அதை விரும்பினால் எங்களுக்கு பிரச்சனை இல்லை தான்”
நிருபர்: “அப்பிடின்னா தமிழ்நாடு பிரியலாமுன்னு சொல்றீங்க?”
கேஜ்ரிவால்: “ஆமா, ஆனா இதனால இந்தியாவோட தேசிய ஒருமைப்பாட்டுக்கு எந்த குந்தகமும் வரக் கூடாது”
நிருபர்: “அதெப்டிங்க முடியும்?”

கேஜ்ரிவால்: “ஓ அப்பிடியா ஒரே குழப்பமா இருக்கே! அப்பிடின்னா இதை எங்க கொள்கை அறிக்கையில் இருந்து எடுத்திடறோம்”
நிருபர்: “தமிழ்நாட்டுக்கான உங்க கொள்கை அறிக்கையில் மீதம் இருக்கிற ஒரே பாயிண்ட் அது தானே. அதையும் நீக்கினா…”
கேஜ்ரிவால்: “அப்பிடின்னா நான் அதுக்கு பதில் தர்ணா பண்ணுவேன். பிளாட்பார்மில தூங்குவேன்”
நிருபர்: “அதான் ஏற்கனவே பண்ணீட்டீங்களே”
கேஜ்ரிவால்: “ஓ! சரி நான் என் முதல்வர் பதவியை ராஜினாமா பண்றேன்”
நிருபர்: “நீங்க தான் இப்ப முதல்வர் கிடையாதே!”
கேஜ்ரிவால்: “அடச்சே, என்னா குழப்பம். இதுக்குத் தான் நான் தமிழ்நாட்டு பக்கமே வரதில்லங்குறது. மிச்சத்தை மிஸ்டர் மோடிகிட்ட பேசிக்கிறேன். அவர் தான் நமக்கு சரிப்பட்டு வருவாரு”

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...