![]() |
| "நீங்க கவலைப்படாதேள், குத்தம் பண்றாவாளை ஸ்வாமி காப்பாத்துவா. ஷேமமா வச்சுப்பா. தட்டில கொஞ்சம் தாராளமா அள்ளிப் போடுங்கோ" |
ஊழல்
குற்றச்சாட்டு காரணமாய் உச்சநீதி மன்றத்தால் பதவி நீக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஸ்ரீனிவாசன்
பிடிவாதக்காரர். வரும் செப்டம்பரோடு அவரது பதவிக் காலம் முடிகிறது. நீதிமன்றத்
தலையீட்டால் அவர் பதவி இழந்த பின்னரும் தன்னை மீள் அமர்த்தும் படி கோரிக்கை
விடுத்தார். அப்போது நீதிமன்றம் “முக்தல் விசாரணை குழுவால் குற்றம் சாட்டப்பட்ட 13
பேரில் நீங்க தான் முதல் ஆள். உங்கள் மீது ஒன்றுக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகள்
உள்ளன” என்று அவரை மீண்டும் கண்டித்த்து. இப்படி அவர் பதவியை அண்டிக் கொண்டே
இருப்பதால் தான் இன்னொரு புறம் ஐ.பி.எல் ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரிக்க
முடியாமலே போகின்றன. தலைவர் தான் பிரதான குற்றவாளி, அவரை பாதுகாப்பதிலேயே
வாரியத்தின் ஆற்றல் எல்லாம் செலவாகும் என்றால் வேறு குற்றங்களை எப்படி
விசாரிப்பது? இன்னொரு புறம் ஸ்ரீனிவாசன் வாரியத்தின் மீது தனக்குள்ள பிடியை
விடாமல் இருப்பதிலும் உன்னிப்பாக இருக்கிறார். ச்சாங்க் மனோகர் போன்று அவருக்கு
எதிரான ஒரு குழுவும் வாரியத்தினுள் உள்ளது. தன் பிடி இளகினால் ஊழல் வழக்கில்
இருந்து தன் மருமகன் மெய்யப்பனை காப்பாற்றுவது சிரம்மாகும் என அவர் அறிவார்.
ஸ்ரீனிவாசன்
பதவி நீங்கியதும் அவ்விடத்தில் தனக்கு அணுக்கமான ஷிவ்லால் யாதவை கொண்டு வந்தார்.
அவரும் ஊழல் பார்ட்டி தான். அதனால் அவர் இருந்தால் தன்னை கேட்டே எதையும் செய்வார்
என ஸ்ரீனி அறிவார். இப்பிரச்சனையை மேம்போக்காய் விசாரிக்க ஒரு போங்கு குழுவை அமைத்தனர்.
இதை நீதிமன்றம் நிராகரித்த்து. இப்போது இன்னொரு விசாரணைக் குழுவின் பட்டியலை
பரிசீலனைக்காக நீதிமன்றத்திடம் வாரியம் கொடுத்துள்ளது. முன்னாள் சி.பி.ஐ இயக்குநர்
ராகவன், முன்னாள் தலைமை நீதிபதி ஜெய்நாராயண் பட்டேல் மற்றும் ரவி சாஸ்திரி. மேம்போக்காய்
ரொம்ப பந்தாவாய் தெரிந்தாலும் இப்பட்டியலும் தவறான நோக்கம் கொண்டதே.
ராகவன்
கம்யுத் எனும் தமிழக TNCA கிரிக்கெட் கிளப் ஒன்றின் செயலாளர்.
இதன் தலைவர் ஸ்ரீனிவாசன். மேலும் இவ்வூழல் குறித்து ஏற்கனவே விசாரித்த நீதிபதி
முக்தலிடம் தனக்கு ஸ்ரீனிவாசனை தனிப்பட்ட முறையில் தெரியும் எனக் கூறியுள்ளார்.
அதாவது ஸ்ரீனிவாசன் ஒருவித்த்தில் ராகவனுக்கு முதலாளியை போன்றவர்.
ரவிசாஸ்திரி
வாரியத்திடம் சம்பளம் வாங்கும் வர்ணனையாளர். அவர் சமீபமாக ஸ்ரீனிவாசனை மிகவும்
புகழ்ந்து பேசி வருபவர். இவரும் ஸ்ரீனிவாசனின் வேலைக்கார்ர் தான்.
இறுதியாக
ஜெய்நாராயண் பட்டேல் ஷிவ்லால் யாதவின் மச்சான்.
இப்படி
குடும்பத்துக்குள்ளே மாமன் மச்சான் சேர்ந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து
விசாரிக்க போகிறார்களாம். இந்த பட்டியலை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என வலுவான
கோரிக்கை எழுந்தது. இவ்வழக்கை வாரியம் நீர்த்துப் போக வைக்க எப்படியெல்லாம் திட்டமிடுகிறது
என்பது இதில் இருந்து தெளிவாகிறது. தற்போது வந்துள்ள செய்திப்படி நீதிமன்றம்
இக்குழுவை நிராகரித்துள்ளது.
இவ்வழக்கில்
நீதிமன்றமும் போதுமானபடி கராறாய் இல்லை. நியாயப்படி நூற்றுக்கணக்கான கோடிகள்
மதிப்பிலான இந்த ஊழல் வழக்கை சி.பி.ஐ போல் ஒரு வெளி அமைப்பு தான் விசாரிக்க வேண்டும்.
ஆனால் இதனால் சில நட்த்திர வீர்ர்களின் பெயர் அடிபடும் என நீதிமன்றம் அறியும்.
அப்படி நடந்தால் அது ஐ.பி.எல் வணிகத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் பொருளாதார
மதிப்பை பாதிக்கும். இதே போல் தான் சஞ்சய் தத்தின் தண்டனையிலும் நடந்த்து. தத்துக்கு
சினிமாவில் நடிக்க வேண்டும், அல்லாவிட்டால் காசு நஷ்டமாகும் என பெயிலில் போக
அனுமதித்தார்கள். இதையே ஒரு சாதாரண ஆள் கேட்டால் அனுமதிப்பார்களா? இல்லை. நம்மூரில்
பணக்கார்ர்களுக்காக நீதி இப்படித் தான் வளைக்கபடுகிறது. அந்த 13 பேரின் பெயர்களையாவது
நீதிமன்றம் வெளியிட வேண்டும். குறிப்பாய் சென்னை சூப்பர் கிங்ஸில் ஊழல் செய்த அந்த
வீர்ர்கள் யார்? அவர்களை காப்பாற்ற முயல்வது யார்? இவர்களுக்கு தண்டனை
வழங்கப்படும் என நாங்கள் நம்பவில்லை. குறைந்த்து உண்மையாவது வெளியாகட்டும்.
நாங்கள் இவர்களின் முகங்களில் சாணி வாரி அடிக்கிறோம். எங்களால் அது மட்டுமே செய்ய
முடியும்!
