Skip to main content

That was a good interview!






சமீபத்தில் “முதல்வன்” திரும்ப பார்த்தேன். இறுதிக் காட்சியில் குண்டடிபட்டு கிடக்கும் முன்னாள் முதல்வர் ரகுவரன் சிரித்தபடி நாயகனை நோக்கி சொல்கிறார்: “அது ஒரு நல்ல பேட்டி”. இந்த வசனம் மொத்த படத்தை திருப்பி போட்டு ரகுவரனின் பார்வையில் இருந்து பார்க்க வைக்கிறது. 

சாகிற கணத்தில் அந்த டி.வி பேட்டி நினைவு வர அவர் யோசித்திருக்கலாம்: “எதற்கு தேவையில்லாமல் ஒரு சவால் விட்டு என் வாழ்க்கையை இப்படி சீரழித்துக் கொண்டேன். பிறகு எல்லாமே ஒரு விளையாட்டு போல் முடிந்து விட்டதே. நான் அந்த ஒரு வாக்கியத்தை சொல்லாமல் இருந்திருக்கலாமே!” என்று. சின்ன விளையாட்டாய் ஆரம்பிக்கிற ஒன்று சீரியசாக அவர் அரசியல் வாழ்க்கையை மாற்றுகிறது தான் அக்கதை, இன்னொரு கோணத்தில். ஒரு சின்ன வசனம் சட்டென்று நமக்கு ஒரு புது பார்வையை கதை பற்றி கொடுக்கிறதென்றால் அது தான் ஆகச் சிறந்த வசனம்.
 சுஜாதா இது போல் அவரது படங்களில் பல இடங்களில் நம்மை நின்று நிதானமாய் யோசித்து ரசிக்க வைக்கிறார். “திருடா திருடாவில்” சி.பி.ஐ அதிகாரியிடம் பேசும் உள்ளூர் போலீஸான மலேசியா வாசுதேவன் “சார் தாட் மேடம் டூ தீவ்ஸ் ரேன் வித் மணி” என அதிகாரி “வேணாம் தமிழ்லயே சொல்லுங்க” என்பார். அதற்கு மலேசியா வாசுதேவர் “இல்ல சார் தமிழ்ல சொன்னா ரொம்ப டைம் எடுக்கும்” என்று விட்டு தமிழிலேயே அதை சொல்ல நிஜமாகவே தமிழில் பேசுகையில் நீளமாகத் தான் உள்ளது என நமக்குத் தோன்றும். இதை மொழிபெயர்க்கையில் நீங்கள் உணர்ந்திருக்கலாம். ஐநூறு பக்க “குற்றமும் தண்டனையும்” தமிழில் 900 பக்கம் வருகிறது. இதே போன்றது தான் “உயிரேயில்” “இது தான் உலகிலேயே மிகச்சுருக்கமான காதல் கதை” எனும் வசனம். வசனம் என்றால் அவசியம் பளிச்சென்று புத்திசாலித்தனமாக இருக்க வேண்டியதில்லை – அதற்குள் இன்னொரு கதை உறைந்திருக்க வேண்டும். சுஜாதாவின் வசனங்கள் கற்பிப்பது இதைத் தான்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...