Skip to main content

மந்திர தந்திர வசீகரமும் பேனா நட்பும்

இன்று தினகரனின் விளம்பரங்களில் பார்வையோட்டிக் கொண்டிருந்த போது சட்டென்று சுவாரஸ்யம் ஏற்பட்டது.

சில ஆண்குறியை வளர்க்கும் மருந்து விளம்பரங்கள். அதில் ஒருவர் தன்னை டாக்டர் என்று கூட குறிப்பிட்டிருந்தார். இந்த கூச்சமும் பயமும் மிகை கற்பனையும் ரொம்ப காலமாய் நம்மவர்களுக்கு இருக்கிறது போலும். சின்ன வயதில் மாத்ருபூதம் டி.வியில் இதிலுள்ள அபத்தத்தை நக்கலாய் விளக்கியது நினைவு வந்தது.   பெண்களின் மார்பகத்தை பெரிசாக்குவதற்கு கூட மருந்து விளம்பரம். அதைப் பார்த்து ஏதோ ஒரு பெண் ரகசியமாய் அஞ்சலில் பணம் அனுப்பலாம்.

அடுத்ததாய் ஆண், பெண்ணை, தம்பதியிரனரை வசீகரிக்கும் மந்திரவாதிகள் மூவர் விளம்பரம் செய்திருந்தனர். இன்னொருவர் நாலே மணி நேரத்தில் மந்திரவாதம் கற்றுத் தருகிறாராம். பக்கத்தில் மூவர் மெழுகுவர்த்தி செய்ய கற்றுத் தருவதாக ஒரே போல் விளம்பரம் செய்திருந்தனர். என்னன்னவோ மனிதர்கள் கற்கும் இக்காலத்தில் கேவலம் மெழுகுவர்த்தி செய்வதற்கு அவ்வளவு டிமாண்டா என்ன? ஆனால் மாந்திரகம் போல் சுவாரஸ்யமாக இராது. அதுவும் நாலே மணிநேரத்தில்!

இதெற்கெல்லாம் உச்சம் பேனா நண்பர்கள். ஒருவர் ரெண்டு செல் நம்பர்கள் கொடுத்து ”ஆண்/பெண் தம்பதிகள்” பேனா நண்பராக விரும்பினால் தொடர்பு கொள்ள கேட்டிருந்தார். சந்தேகங்கள் மூன்று. ஒன்று, பேனா நண்பராக வேண்டியவர் ஏன் அதற்கு செல் நம்பர் கொடுக்கணும்? இரண்டு, செல்லில் பேசிய பிறகு எதற்கு மெனக்கெட்டு பேனா காகிதம் ஸ்டாம்பு எடுத்து எழுதி ஒட்டி ஸ்நேகிகம் வளர்க்க வேண்டும்? கடைசியாய், அதென்ன “ஆண் பெண் தம்பதியர்”? சாதா ஆண் பெண்ணிடம் எல்லாம் நட்பு வளர்க்க மாட்டாரா?
எனக்கு இது நிஜமாகவே பேனா நட்பு விளம்பரமாக படவில்லை.

சரி எதற்கும் கூப்பிட்டு பார்க்கலாம் என நினைத்தேன். அப்புறம் மறந்து விட்டேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...