Skip to main content

எனக்கு கல்யாணம் - உனக்கு சாவு


எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். பெயரளவில் தான். ஒரு முறை நான் ஆஸ்பத்திரியில் சாகக் கிடக்கும் போது போன் பண்ணினான். நான் மயக்கத்தில் இருந்தேன். என் மனைவியிடம் பேசினான்.


மனைவி: “ஹலோ யாருங்க? அபிலாஷ் கோமாவில இருக்காரு. பேச முடியாது”
நண்பன்: “எனக்கு 22தேதி கல்யாணம் நடக்கப் போவுது. அவனை அழைக்கலாமுன்னு தான் கூப்பிட்டேன்”
மனைவி: “அவரு ரொம்ப சீரியஸா ஆஸ்பத்திரியில இருக்காருங்க.”
நண்பன்: “ஆமா அதுக்குத் தான் கூப்பிட்டேன். எனக்கு கல்யாணம் 22ஆம் தேதி. சொல்லாமுன்னு கூப்பிட்டேன்”
மனைவி: “இல்லை அவருக்கு...”
நண்பன்: “எனக்கு கல்யாணம்...எனக்கு கல்யாணம்...எனக்கு கல்யாணம்”

நான் நலமான பிறகு இதை தெரிந்து கொண்டேன். ஒருவேளை போன் லைனில் ஏதாவது தகராறு இருந்திருக்கலாம். அதனால் தான் அவன் புரியாமல் சொன்னதையே சொல்லி இருப்பான் என நினைத்துக் கொண்டேன். ஆனால் கொஞ்ச நேரத்தில் அதே நண்பன் அழைத்தான்.

“டேய்  உன்னை எவ்வளவு நாளா புடிக்க டிரை பண்றேண்டா. இன்னும் ஒரு வாரத்துல எனக்கு கல்யாணம் டா”

“நான் இப்போ தான் உயிருக்கு போராடி பொழைச்சு வந்திருக்கேன். ரெஸ்டில இருக்கேன்”

“அதாண்டா. உனக்கு போன் பண்ணினா நீ பேச மாட்டேங்குற. உன்  மனைவி தான் பேசுறா. எனக்கு கல்யாணம்னு உங்கிட்ட சொல்ல ஆசையா வந்தேன்”

“டேய் நான் அப்போ கோமாவில இருந்தேன். எப்பிடி பேச முடியும்?”

“ஆங்...? சரி உனக்கு போன் பண்ணினா நீ எடுக்க மாட்டேங்குற. ஆளை பிடிக்க முடியல. ரொம்ப பெரிய ஆளாயிட்ட இப்போ. சரி எனக்கு கல்யாணம். அதுக்காவது இப்போ வந்து தொலை”
அதுக்கு மேல் முடியாமல் கட் செய்து விட்டேன்.

இந்த அளவுக்கு இல்லையென்றாலும் கிட்டத்தட்ட இதோ போன்ற பலருடன் தினமும் உரையாடி வருகிறேன். “என்னடா மச்சான் எப்படி இருக்க?” அல்லது “வணக்கம் எப்பிடி இருக்கீங்க?” என்று வாஞ்சையாக கூட கேட்பார்கள்/நலம் விசாரிப்பார்கள். நீங்கள் உங்கள் நிலைமையை விவரித்தால் அதை கேட்காமல் தம்மைப் பற்றி பேச ஆரம்பிப்பார்கள். அதெப்படி நான் பேசும் போது மட்டும் உங்களுக்கு காது கேட்காம போகுதுடா?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...