Skip to main content

பாலசந்திரனும் புலிகளின் குழந்தைப் போராளிகளும்


புலிகள் குழந்தைப் போராளிகளை பயன்படுத்தியது குறித்து ஒரு கட்டுரை இன்றைய இந்துவில் வந்துள்ளது. சிங்ளப்படையினர் பாலசந்திரனை கொன்றதை கண்டிக்கும் போது மேற்சொன்ன புலிகளின் தவறையும் நினைத்துக் கொள்வோம் என்கிறார் ஆசிரியர். 


பொதுவாக இன்று இன/மத அழித்தொழிப்புகள் குறித்த வினா எழுப்பப்படும் போது மறுதரப்பு எய்கிற மாமூல் ஆயுதம் இது: நீங்களும் குற்றம் செய்யவில்லையா?

இது ஒரு முட்டாள்தனமான கேள்வி. இரு குற்றங்கள் ஒரு சரியாகி விடாது. தவறு என்றுமே தவறு தான். 
 
புலிகள் செய்தது தவறென்பதை நாம் மறுக்கப் போவதில்லை. ஆனால் அத்தவறுக்கு பதில் கூற அவர்கள் உயிருடன் இல்லை. அவர்களை குற்றவாளிக் கூண்டில் நாம் ஏற்ற முடியாது.  ஆக, அதைப் பற்றி இனி பேசுவதிலும் பொருளில்லை. 

சிங்களப்படை தளபதிகளும் ராகபக்‌ஷேவும் உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் செய்த குற்றத்துக்கு தண்டனை அனுபவித்தாக வேண்டும். இது மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்கள் சம்மந்தப்பட்ட ஒரு பிரச்சனை. முன்பு ஜெயலலிதா கூறியது போல சிலர் போர்க்குற்றங்கள் தவிர்க்க முடியாதவை என இதற்கு நியாயம் பேசுகிறார்கள். ஆனால் உலகம் முழுக்க போர்க்குற்றங்களுக்கு தலைவர்களும், ஜனாதிபதிகளும், தளபதிகளும் பதில் சொல்லி தண்டனை அனுபவித்தே இருக்கிறார்கள். யாரும் இதுவரை உலக சமூகத்தால் மன்னிக்கப்பட்டது இல்லை. ராஜபக்‌ஷேவும் ஒரு நாள் தன் பாவங்களை கழுவி ஆக வேண்டும்.

சமீபத்தில் என்னுடைய முகநூலில் காவிப்படையினர் ஏவிய மும்பை கலவரத்தைப் பற்றின காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தேன். அதற்கு என் இளம்பருவ நண்பன் ஒருவன் “கூட கோத்ரா வன்முறை படங்களையும் நீ பகிர்ந்து பாரேன்” என்று குறுந்தகவல் அனுப்பி இருக்கிறான். கோத்ரா உண்மையில் ஒரு மதவாத தாக்குதால் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். மும்பையில் அப்பாவி மக்களை பா.ஜ.க கொன்றதை கோத்ராவால் நியாயப்படுத்த முயல்வது படு அபத்தம். ஒரு விவாதத்தில் கண்ணுக்கு கண் கேட்பவர்கள் ஒரு பண்பட்ட நாட்டில் வாழும் தகுதி அற்றவர்கள்.

சுருக்கமாக, புலிகளுக்கும் ராஜ பக்‌ஷேவின் மனித உரிமை மீறல்களுக்கும் சம்மந்தமில்லை. புலிகள் ஆயிரம் குற்றங்கள் செய்திருந்தாலும் இலங்கை தன் கழுத்தை பலி பீடத்தில் வைத்து தான் ஆக வேண்டும்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...