Skip to main content

ஸ்டண்ட் கலைஞன் அல்ல - மதிமலர்




முஷ்டியை முறுக்கி நெஞ்சு தசைகள் அனைத்தும் இறுகி முகம் கல்லாக மாறி
கோபத்தின் ஆவி பறக்க, ஒரே அடியில் ஆளைக் காலி செய்யும் புரூஸ் லீ
என்ற நடிகனின் திரைப்படங்களை திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே
இருக்கிறோம். அவனைப் பற்றிய பன்முக பிம்பத்தை இந்த நூலில் உருவாக்கி
இருக்கிறார் ஆர். அபிலாஷ். சின்ன வயதில் ஷாங்காயின் நெருக்கமான தெருக்களில்
சதா சண்டையிட்டுத் திரிந்த நோஞ்சான் இளைஞனான புரூஸ் லீ, குங்-பூ கற்று பெரும்
சண்டைக் கலைஞனாக உருப்பெறுவது இந்நூலின் பக்கங்களில் அபிலாஷுக்கே உரிய
மொழியில் கட்டமைக்கப்படுகிறது. புரூஸ்லீக்குப் பெயர் வைத்தது அவர் பிறந்த
மருத்துவமனையின் மருத்துவர் என்பதில் ஆரம்பித்து சமீபத்தில் தமிழில் புரூஸ் லீக்கு
மிஷ்கின் செலுத்தும் மரியாதை வரைக்கும் இந்நூலில் கொண்டு வந்துள்ளார். நான்
அமெரிக்காவில் அதிகம் சம்பாதிக்கும் ஆசிய நடிகன் ஆவேன். பத்து ஆண்டில் ஒரு
கோடி டாலர் பணம் சம்பாதிப்பேன் என்று தான் படுத்த படுக்கையாகக் கிடந்தபோது
எழுதி வைத்து, அதன் படியே வென்றவர் புரூஸ் லீ. அவரிடம் ஆயிரக்கணக்கணக்கான
புத்தகங்கள் இருந்தன. வாஷிங்டன் பல்கலையில் அவர் தத்துவம் பயின்றவர்- ஆகிய
புரூஸ் லீ பற்றிய பெரிதும் அறியப்படாத தகவல்களும் அவரது காதல், ஜென்
ஞானியைப் போன்ற ஒட்டாத நடவடிக்கைகள், அவர் குங் பூ ஆசானாக அமெரிக்காவில்
புகழ் பெற்ற கதைகள், அவர் பங்குகொண்ட சண்டைகள், சவால்கள்- படிக்கப் படிக்க
புரூஸ்லீ பெரும் காவிய நாயகனாக நம்முன் எழுந்து நிற்கிறார். எல்லாவிதமான
முரண்களும் கொண்ட ஒரு சாதாரண மனிதனாக இருந்த அவர் அவற்றுடனே
அவற்றைக் கடந்து சென்றிருக்கிறார் என்பதே இந்நூல் விளக்கும் செய்தி.

நன்றி: அந்திமழை மார்ச் 2013

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...