Skip to main content

குருதி சொரியும் ஒரு கையின் சுவை





ஒரு நீண்ட சுயமைதுனத்தின் முடிவு
ஒரு நீண்ட வெந்நீர் மழையில்
படிகத்துளிகளிடையே
ஆயிரமாயிரம் சிதறல்களாய் நகர்ந்து
ஒரு அரையிருள் கடற்கரையை வந்தடைவதைப்
போன்று உள்ளது.

அங்கு
தனியாக அலைகள் மோதும் சொதசொத மணலில்
நாய்கள் ஒரு ஆடைகிழிந்த பிணத்தை
கிழித்து தின்னுகின்றன
சேலைமேல் அழுக்கான சட்டையை அணிந்து
மூட்டைக்குள் தாயத்துகள் மற்றும் சுருட்டி பழைய ரூபாய் நோட்டுகளை
கொண்ட
வீடு திரும்பும் சோதிடக்காரி
என் கையைப் பற்றி அவசர அவசரமாய்
ரேகைகளை இடமாற்றி
தகவல்களை பரப்புகிறாள்.
தன் முன்மயிரை ஒதுக்கி
அதிலொன்றை பறித்து
மனதை சிடுக்கிடுகிறாள்.
பின் தன் குச்சியால் நாய்களைத் துரத்தி
ஒரு ஈரமான தாயத்தை கழற்றி
அணிவித்து காசு வாங்கிக் கொள்கிறாள்.
நாய்கள் திரும்பப் போய்
அலைநுரைகளை நக்கிக் கொள்கின்றன.

நான் ஆளரவமற்ற அந்த கடற்கரையில்
அந்த அழகிய கையை எடுத்து
மெல்ல மெல்ல மென்று உறிஞ்சியபடி
வியக்கிறேன்
ஒரு நீண்ட சுயமைதுனத்துக்குப் பின்
மனித தேகம் இவ்வளவு
இனிக்குமா என.

பிறகு
இதமான வெந்நீர் மழை
மெல்ல மெல்ல குளிரேறி
பனிக்கட்டி நகரமொன்றில்
என்னை நிறுத்துகிறது.
திறந்த வாய்க்கும்
உறைந்த கைகளுக்கும்
இடையே
அழகிய கையின்
குருதி மட்டும்
உறையாது சொட்ட,
வானம் முழுக்க குத்தீட்டிகளாய் தொங்கும்
உறைமழைக்கும்
எனக்கும் இடையே
இமைக்காத வெண்பரப்பில்
பனிக்கட்டித் துளி ஒன்று
விழுந்து உருளாது நிற்கும்
திறந்த ஒரே கண்.

நாடி துடிக்கும்,
பச்சைநரம்புகள் நெளியும்
அந்த அழகிய கையை
அருகில் கொணர முடியாது
மனம் தவிக்கையில்
தலைக்கு மேல்
தொங்கும் நீர் அம்புகள்
உலோக உரசலாய் கிலுகிலுத்து
காது நிரப்பும்.
பற்கள் கூச
எலும்புகள் விரிசலிட
மழையின் கூர்விளிம்புகள் பரஸ்பரம் மோதி
சரசரவென அதிர்ந்து அடங்கும்
இரவெல்லாம்.

விடிகாலையில்
விரல்கள் கொத்தாய் நிற்கும் முழங்கை எலும்பை
புதைத்து விட்டு
இந்த புயலில்
திரும்புகையில்
கடற்கரையில் இருந்து வீடுவரை
குப்பைகளும் பாலிதீன்பைகளும் கிழிந்து சாம்பலான துணிகளும்
ப்ளாஸ்டிக் பாட்டில்களும் பழைய காகிதங்களும்
ஆளுயரத்துக்கு எழுகின்றன
பாதைகளின் இரு பக்கமும்.
காற்றும் நீரும் ஆகாரமும்
தூசாய் தொண்டையில் சிக்கி
கசப்பாய் வயிற்றில் நிரம்புகின்றன
அப்போது
நினைத்துக் கொள்கிறேன்
அத்தனை உணவுகளிலும் பானங்களிலும்
உமிழ்நீரளவு சுவை
எதிலும் இல்லையென.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...