Skip to main content

மரணத்தின் வாசலில்



இதே காலகட்டத்தில் புரூஸ் லீ தான் விரைவில் இறந்து விடுவோம் என்று நம்பவும் துவங்கினார். 1973 மே மாதம் தன் அம்மாவை சந்தித்த போது தன் மரண பயத்தை வெளிப்படுத்தினார். “அம்மா உன் எதிர்காலம் பற்றி கவலைப்படாதே. நான் இல்லாமல் போனாலும் கூட உனக்கு இனி பணக் கஷ்டமே இருக்காது” என்று உருக்கமாக கூறினார். Enter the Dragonஇல் ஹான் பாத்திரத்தில் வில்லனாக நடித்த ஷி கியன் ஒரு மூத்த நடிகர். புரூஸ் லீயை சிறு வயதில் இருந்தே நன்கு அறிந்தவர். லீ படப்பிடிப்பு தளத்தில் அவரை சந்தித்து “மாமா நான் விரைவில் இறந்து போய் விடுவேன்” என்று கூறினார். அதற்கு கியன் ”உனக்கு இப்போது நிறைய ஓய்வு தேவை” என்று மட்டுமே பதில் கூறினார். இதன் பொருள் புரூஸ் லீக்கு தன் வரப் போகும் மரணம் பற்றின் உள்ளுணர்வு இருந்ததென்றா? இல்லை. மரணம் அவ்வளவு எளிதில் ஊகிக்க முடிகிற ஒன்று அல்ல. மேலும் யாரும் உள்ளூர சாக விரும்புவதும் இல்லை. ஆனால் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தங்களது வலி மற்றும் கசப்பு காரணமாய் மரணத்தை பற்றி தொடர்ந்து சிந்தித்தபடி இருப்பார்கள். சம்மந்தம் இல்லாதவர்களிடம் கூட வெளிப்படையாக மரணத்தைப் பற்றி குறிப்பிடுவார்கள். ஒருவித அச்சம் தான் இதற்கு காரணம். மரணம் பற்றின அவரது பிரஸ்தாபங்கள் அவர் எவ்வளவு தீவிரமான நெருக்கடியில் இருந்தார் என்பதைத் தான் காட்டுகிறது.

(புரூஸ் லீ சண்டையிடாத சண்டை வீரன் நூலில் இருந்து)

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...