Skip to main content

கொல்லப்பட்டவனும் கடவுளும்




ஒரு கொலையை ஆதரிக்க
நீங்கள் எவ்வளவு தூரம் செல்ல நேர்கிறது!
ஒரு கொலைக்கு
உண்மையில்
இவ்வளவு நியாயங்களா இருக்க முடியும்?
துரோகம் செய்வதில் இருந்து
குருதி இழைப்பது வரை
ஒரு களங்கமின்மை, தூய்மை, கனிவு உள்ளது
வன்முறையில் அடிப்படையில் உள்ளது
ஒருவித அன்பு தான்

வன்முறை
அன்பின்
துருபிடித்த ஆயுதமொன்றின் வாசனையும் நிறமும் படைத்த
மொழிதான்

குருதி சிந்துபவரை
உறுப்புகளை நறுக்குபவரை
மனித வலியை ரசிப்பவரை
சதையை சிதைத்து தீக்கிரையாக்குபவரை
கழுத்தில் இட்டு முறுக்கும் கயிறை கவனமாய் சோதிப்பவரை
பாதுகாவலரை தூக்குக்கைதியின் பாதுகாவலரை
இறுதி ஆசையை நிறைவேற்றுவோர், இறுதிக் கவலைக்கு பொறுப்பாகுவோர்
இறுதி நிமிடம் வரை உயிரை தக்க வைக்க உழைப்பவர்
இறுதி நிமிடத்துக்குப் பின்னான இல்லாத எதிர்காலத்தை
மீளமீள
ஸ்வீகரித்து புனைவுகளில் நம்பிக்கைகளில் துர்கனவுகளில்
பத்திரப்படுத்துவோரை
விட
அக்கோலையை செய்கிற அரசை விட
அரசின் குரலில் பேசும் அதிகார எந்திரம், மீடியாவை விட
ஒரு மனிதனின் கொலையை
நியாயப்படுத்த அப்படி தத்தளிப்போர் ஆவேசப்படுவோர்
தம் தர்க்கத்தில் விடாமல் அதை நிகழ்த்திக் கொண்டிருப்போர்
பிணத்தின் குருதியைக் கண்டு அஞ்சுபவர்
கொலையை வெறுப்பவர் மறுப்பவர்
அதனை எப்படியெல்லாம் ஆதரிப்பது என
கனவு காண்பது தான்
துக்கத்திற்கு உரியது.

கொல்லப்பட்டவன்
கோடானுகோடி மனங்களில்
இருப்பது போல்
எதார்த்தத்தில் இருப்பதில்லை
அவன் கோடானுகோடி முறை கொல்லப்படும் போது
ஆயிரம் ஆயிரம் மொழிகளில்
பேசுகிறான்
அழுது இறைஞ்சி குமுறி கண்ணீர் சிந்துகிறான்
அல்லது மொழியற்றவனாக
எதையும் ஏற்றுக் கொள்பவனாக இருக்கிறான்
கொல்லப்படுபவனுக்கு
கோடானுகோடி முகபாவங்களும் குணாதசியங்களும் மனநிலைகளும்
உருவாகின்றன
கொல்லப்படுபவனை
உங்கள் நியாயத்திற்கு வளைக்கும் போது
அவன் கோடானுகோடி முறை கொல்லப்பட்டவாறே
இருக்கிறான்.
அவன் துர்விதி
நம் கடவுளர்களின்
முடிவுறாத பிறப்புகளின் வாதையை ஒத்தது.
ஒரு மனிதனை
சட்டப்படி கொன்று
அவனை
உங்கள் நாட்டின் கோடானுகோடி கடவுளர்களில்
ஒருவர் ஆக்குகிறீர்கள்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...