Skip to main content

ஏன் எழுத்தாளர்களைப் பார்த்தால் பயப்படுகிறேன்?



எனக்கு எழுத்தாளர்களை பார்த்தாலே குலை நடுங்கும். ஏன் என விளக்கி விடுகிறேன்.



1. அவர்கள் நம்மிடம் பேச ஆரம்பித்தால் கழுத்தில் ரத்தம் வரும் வரை விடமாட்டார்கள்.


2. எழுத்தாளனாக போஸ் கொடுத்தபடி பஞ்ச் வசனம் பேசுவார்கள்.


3. வேறு யாரிடமோ சொல்ல வேண்டியதைக் கூட நம்மிடம் சொல்லுவார்கள்.


4. தம் கவிதை, கதைகளின் பொருள் என்ன என விடாமல் வியாக்கியானிப்பார்கள் அல்லது தன் ஆளுமையை பிரஸ்தாபிப்பார்கள்.




5. இதனிடையே மறந்து கூட காப்பி தண்ணி தரமாட்டார்கள்.


6. நீங்கள் வீட்டுக்குள் நுழைந்ததுமே ஒரு சந்தேகப் பார்வை பார்த்து “வாங்க” என்பார்கள். போகும் போது அதே பார்வையில் “வாங்க” என்பார்கள்.


7. எதிர்க்கலாச்சார்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களிடம் போனால் “நான் ஒரு வாரமாக் மூணு வேளையும் குடிக்கிறேன்” என்று சொல்லி மந்தஹசிப்பார்கள். பிறகு நான் ஒரு பொறுக்கி, உதவாக்கரை, ஒன்றும் சாதிக்காதவன், ஆனாலும் மகத்தானவன் என சொல்லி விட்டு உங்கள் கண்களை உற்றுப் பார்ப்பார்கள்.


8. நீங்கள் இடையே புகுந்து ஏதாவது சொல்லி விட்டால், “நானும் அதாங்க சொல்றேன்” என்று தான் சொல்லி வந்ததையே தொடர்வார்.


8. சுருக்கமாக மேடை நாடகத்தில் ஒரே ஒரு பார்வையாளனாக இருக்கும் நிலை ஏற்படும்.




நான் சந்தித்ததில் தேவதேவனும் மனுஷ்யபுத்திரனும் விதிவிலக்கு. தேவதேவனுடன் ஒரு கேம்பில் ஒரே அறையில் இரண்டு நாள் இருந்தேன். அவர் ஒரு சொல் கூட சொல்லவில்லை. மனுஷ் இலக்கியம் பேச மாட்டார், ரொம்ப நோண்டினால் ஒழிய. சு.ராவையும் குறிப்பிட வேண்டும். அவருக்கு நீங்க மிக அணுக்கமானால் ஒழிய இலக்கிய சங்கதிகளை வெளியே எடுக்க மாட்டார். உங்கள் பின்னணி, தொழில் வேலை படிப்பு விபரங்களை விசாரித்து அது குறித்து ரொம்ப சாதாரணமாக உரையாடிக் கொண்டிருப்பார். 8 மணிக்கு சன் செய்திகள் ஆரம்பித்ததும் உங்களிடம் தெரிவித்து விட்டு அதை போட்டு பார்ப்பார். சரியாக உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்ததும் “எனக்கு வேற வேலை” இருக்கு என விடைபெறுவார். முக்கியமாக அவர் உங்களை ஒரு ரத்தம், சதை எலும்பு உள்ள ஒரு வழக்கமான மனிதராக பாவிப்பார். தன்னையும் அப்படியே.


எல்லாவற்றையும் விட முக்கியம் சு.ராவிடம் பேசும் போது உங்களுக்கு ஒரு எழுத்தாளனிடம் உரையாடும் உணர்வே ஏற்படாது. அது எவ்வளவு பெரிய காரியம் இல்லையா?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...