Skip to main content

இந்தியா-இங்கிலாந்து டெஸ்டு 1: ஆடுதளத்தின் விந்தை



இந்த டெஸ்டுக்கான ஆடுதளம் எவ்வளவோ சர்ச்சைகளை அதில் அணிகள் ஆடும் முன்னரே தோற்றுவித்தது. அதிகப்படியாக சுழலை ஆதரிக்கும், சீக்கிரம் நொறுங்கி ஆடுவதே சிரமமாகும் என்றெல்லாம் இங்கிலாந்து ஆதரவாளர்கள் பயந்தார்கள்.
ஏனென்றால் ஆடுதளம் சமீபமாக புதிதாக அமைக்கப்பட்ட ஒன்று. அதிகமாக மணலும் குறைவாக களிமண்ணும் போட்டு தளத்தை தயாரித்ததால் அது எளிதில் சுழலும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிதாக தயாரிக்கப்பட்டது என்பதால் ஆடுதளம் மிக மெத்தனமாகவும் இருந்தது. இதில் ஒரு சிக்கல் மட்டையாடுவது, விக்கெட் எடுப்பது இரண்டுமே சிரமம் என்பது.

இந்த ஆடுதளத்தில் சில புள்ளிகளில் பந்து பட்டால் மணல் பெயர பந்து எகிறி சுழலுகிறது. ஓவருக்கு ஒன்றிரண்டு முறை இது நிகழ்கிறது. அதாவதூ பந்து தொடர்ச்சியாக ஒரேவித சுழல் மற்றும் துள்ளலை கொண்டிருப்பதில்லை. அதனால் ஒரேயடியாக அடித்தாடுவதோ தடுத்தாடுவதே ஆபத்தானது. இந்தியாவின் சேவாக், காம்பிர், சச்சின், கோலி ஆகியோர் இப்படித்தான் முழுமையான தாக்கியாடும் அணுகுமுறையால் ஆட்டமிழந்தார்கள்.

இங்கிலாந்து மட்டையாடிய போது அவர்கள் முழுமையாக தடுத்தாடிய போதெல்லாம் ஆட்டமிழந்ததை பார்த்தோம். பீட்டர்ஸன், டுரோட், காம்ப்டன் ஆகியோர் போன்று. ஆனால் பெல் ஒரேயடியாக அடித்தாட பார்த்து ஆட்டமிழந்தார். ஒரு இடைத்தரமான மட்டையாட்டம் தான் உசிதம். இந்தியாவின் புஜாரா, இங்கிலாந்தின் குக் ஆகியோர் இதற்கு நல்ல உதாரணம்.

குக் இன்று மிக அழகாக ஆடினார். அவரது வலிமை வெட்டி ஆடும் ஷாட்கள். அவர் விரட்டும் நீளத்தில் வரும் பந்துகளை தவிர்த்து பின்னங்காலில் காத்திருந்தார். முன்னங்காலில் அவரது தடுப்பாட்டம் உறுதியாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் அவரை முன்னங்காலில் விரட்ட வைத்து வெளியேற்றினார்கள். முன்னங்காலில் ஆடுவது குக்கின் பலவீனமாக கருதப்படுகிறது. ஆனால் இரண்டாம் இன்னிங்ஸில் அவர் அஷ்வினை அற்புதமாக முன்னங்காலில் கவர் பகுதியில் நான்கு ஓட்டங்களுக்கு விரட்டினார். அது ஒரு வலுவான செய்தியாக அமைந்தது. அதற்கு பின் முன்னங்காலில் அவருக்கு பொறி அமைக்க அஷ்வின் அதிகம் முயல்வில்லை. குக்கின் சிறப்பு என்னவென்றால் அவர் அடித்தாடுவது என்று முன்கூட்டி முடிவெடுத்து இயங்குவதில்லை. பெரும்பாலான பந்துகளுக்கு மதிப்பதிளித்து ஆடி தேவையான போது மட்டுமே நல்ல நீள, முழுநீள பந்துகளை தாக்குகிறார். அதுவும் வீச்சாளர்களை குறைநீளத்துக்கு வீச தூண்டும் விதம் மட்டுமே இதை உத்தியாக பயன்படுத்துகிறார்.


ஒரு உதாரணம் பார்ப்போம். ஓஜ்ஜா முழுநீளத்தில் பந்தை உள்ளே கொண்டு வந்து அவரை எல்.பி.டபுள்யு ஆக்கப் பார்த்தார். அதைத் தவிர்ப்பதற்காக குக் மீண்டும் மீண்டும் அவரை ஸ்வீப் செய்து நான்கு அடித்தார். ஓஜ்ஜா ஆப் குச்சிக்கு வெளியே போட்டால் அவர் வெட்டி ஆடினார்.

ஓஜ்ஜாவுக்கு உள்ள பிரச்சனை ஆடுதளம் மெத்தனமாக உள்ளதே. அதனால் மட்டையாளர்கள் பந்து எகிறாது என்ற நம்பிக்கையில் ஸ்வீப் செய்யலாம். பன்னங்காலில் காத்திருந்து வெட்டலாம். அந்தளவுக்கு நேரம் உள்ளது. மேலும் எல்லா பந்துகளை இத்தளத்தில் சுழல்வதும் இல்லை. வேகவீச்சாளர்களும் வழமையான ஸ்விங்கோ ரிவர்ஸ் ஸ்விங்கோ கிடையாது. ஆனாலும் நல்ல சுழலர்கள் இருவர் இருப்பதாலும் இந்தியர்கள் தன்னம்பிக்கையாக சுழலை மட்டையாடுவார்கள் என்பதாலும் இந்த முதல் டெஸ்டை இதுவரை இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.

இந்த ஆடுதளம் மட்டையாளம், வீச்சாளர் இருவரையும் காத்திருந்து ஆட நிர்பந்திக்கிறது. நாளை யார் அதிக பொறுமையுடன் இருக்கிறார்களோ அவர்கள் மேலெழுவார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...