Skip to main content

ஆரோக்கியமான காலம்




நோயில் இருந்து மீண்டு வந்த மனிதன்


ஆஸ்பத்திரிகளிலும்

விண்ணப்ப படிவங்களிலும்

கௌரவ உரையாடல்களிலும்

பெண்களின் அருகாமையிலும்

தன் வயதை குறைத்து குறிப்பிடுபவன் போல்

இருக்கிறான்




அவன் எரிச்சலாக

இருக்கிறான்

தூங்கிக் கொண்டிருக்கும் போது

திருடிச் சென்ற நண்பனைத் தேடுபவனைப் போல்



வேகமாய் இயங்குவதும்

காலத்தை சேமிப்பதும் ஒன்று என

நம்புகிறான்

ஆனால்

எல்லாம் தப்பாகவே நடக்கிறது



எல்லாரும் அவன்

பல்வேறு விதங்களில் மாறி விட்டதாக

சொல்லுகிறார்கள்

எடை இழந்ததாய்

எடை கூடியதாய்

புன்னகைப்பதாய்

முகம் சுளிப்பதாய்

முடி கொட்டியதாய்

நகம் கடிப்பதாய்

சற்றே நொண்டுவதாய்

வேகமாய் நடப்பதாய்…

இப்போது யோசிக்க

இது தானே அல்ல

எனப் பட்டது அவனுக்கு



தான் காலத்துக்கு

வெகுபிந்திப் போய் விட்டதாய்

அவனுக்கு அப்போது

சந்தேகம் வந்தது



அவன் ஒவ்வொன்றையும்

பாதி வேகத்தில் செய்ய

தீர்மானித்தான்

காலை எழுந்து தூங்கும் வரை

மிக மிக மெல்ல இயங்குவது

எளிதே

ஒரே சிரமம்

எதற்கும்

நேரம் போதுமானதாக இருப்பதில்லை

என்பது



ஆரோக்கியம் முழுக்க மீட்டு

திரும்பிய போது

அவனது ஒரு வாரம்

பிறருக்கு

ஒரு நாளாக இருந்தது

அவன் தூங்கிக் கொண்டே

அல்லது விழித்தபடியே

பெண்களை அனுபவித்த்தபடியே

அல்லது வேலை செய்து கொண்டே

சதா இருப்பதாய்

அவர்கள் புகார் சொன்னார்கள்



நோயில் இருந்து முழுக்க மீண்ட பின்

அவனுக்கு புரிந்தது

நோயில் இருப்பது தான்

ஆரோக்கியமான காலம் என

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...