Skip to main content

இனிய சேதியில் ஆரம்பமாகும் நாள்



ஒரு இனிய செய்தியில் ஆரம்பமாகும் நாள்
அப்போதில்
இருந்து தான்
துவங்குகிறது

ஒரு இனிய நாள்
கண்டனங்கள் ஏமாற்றங்கள் வருத்தங்களில் இருந்து
மிக பாதுகாப்பாக இருக்கிறது
வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையை போல்

அதற்கு மிக ரகசியமாக
உணவு போகிறது
மிக அலட்சியமாக புரண்டு படுக்கிறது
திரும்பிப் பார்க்காதவர்களுக்கு
அமைதியாக சில உதைகளை விடுகிறது

வழமையாக நம்மை
அவமானிக்கும் சங்கடப்படுத்தும் கண்ணீர் விட வைக்கும்
எதிரிகள்
ஒருநொடி குழம்பிப் போய் விடுகிறார்கள்
இனி என்ன செய்வது என.


ஒரு இனிய செய்தியுடன் துவங்கும் நாளை
யாராலும் நிறுத்த முடியாது -
துவங்கி முடியாத
அந்த நாளில்
எதேச்சையாக நீங்கள் விழிக்கிறீர்கள்

மீண்டும் அந்நாள் முடிகையில்
மழைபெய்யும் நாளில் தொப்பலாக வீடு திரும்புவது போல்
ஒவ்வொரு அறிந்த விரலாக தொட்டு
ஆசுவாசம் கொள்கிறீர்கள்
இனிய செய்தியில் ஆரம்பமாகும் நாள்
நம்மை
அவ்வளவு மூச்சு முட்ட வைக்கிறது

ஒரு இனிய செய்தியில் ஆரம்பமாகும் நாளைப் போல்
மிக அமைதியாக மகிழ்ச்சியை
வேறெதுவும்
தக்க வைப்பதில்லை
மகிழ்ச்சியோ நெகிழ்ச்சியோ எக்களிப்போ
ஒரு விரல் தீண்டலில் எதிர்தொடுகைக்கு புரிந்து விடுகிறது

நெரிசலான மக்கள் கூட்டத்தை பார்த்தபடி
அந்நியமாக தனியாக
நடைபாதையில் அமர்ந்து
கேவி கேவி அழுபவனை பார்த்திருக்கிறோம்
கடந்து போகும் நம்மை திடுக்கிட வைக்கும் படியாய்
செல்போனில் சட்டென கூவி அழும்
பெண்ணை கேட்டிருக்கிறோம்
மெல்ல கசக்கும் கண்களைப் பார்த்து
தூசா அழுகையா உண்மையா நடிப்பா என வியந்திருக்கிறோம்
துக்கத்துக்கு அவ்வளவு பிரயத்தனம் தேவையுள்ளது
நீங்கள் துக்கித்திருப்பதை நம்ப
யாருமே தயாராக இல்லை
அது சாத்தியமே இல்லை
அதில் நியாயமே இல்லை
ஒவ்வொரு பக்கமிருந்தும்
ஆறுதல் வருகிறது
களைத்து குற்றவுணர்வு அடைகிறீர்கள்

ஆனால் ஒரு இனிய செய்தியுடன் நாளை ஆரம்பித்தவனை
சட்டென்று நம்பி விடுகிறார்கள்
வறண்ட புன்னகையுடன் கைகுலுக்கிறார்கள்
மேலோட்டமான் குரலில் வாழ்த்துகிறார்கள்
கோபமாய் வெறிக்கிறார்கள்
இதெற்கெல்லாம் மகிழ்ச்சியடைவது மிகை என குறிப்புணர்த்துகிறார்கள்
துயரத்தின் போது அசலான நண்பனை கண்டறியலாம்
என யார் சொன்னது?
எனது வாழ்வின் மிக இனிய நாளின் போது
நான் கண்டேன்
ஒரு மிக இனிய நாளை
மிக கசப்பான நாளில் இருப்பவர்களால் தான்
அறிந்து கொள்ள முடியும் என

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...