Skip to main content

அவமானத்தின் உறவு



என்னை அவமானப்படுத்தியவர்கள்
மிகக் குறைவாகவே
என்னைப் பற்றி அக்கறை கொண்டிருக்கிறார்கள்
கவலைப்பட்டிருக்கிறார்கள்
யோசித்திருக்கிறார்கள்
பல பேர் என் பெயரை கூட
சரிவர அறியாதவர்கள்

அவர்கள் ஏன் என்னை
அவமானப்படுத்துகிறார்கள்
என்பதை விட
என் மீது
அன்பு கொண்டவர்கள்
வெறுப்பு பாராட்டுபவர்கள்
கவலை கொள்பவர்கள்
ஏதாவதொரு விதத்தில்
சிந்தனையில் பயன்படுத்துபவர்கள்
என்னை ஒத்த பெயர்கள் வரும் போது
ஒரு நொடி
தயங்கி மீள்பவர்கள்
ஏன் என்னை
அவமானப்படுத்துவதில்லை
என்றே வியக்கிறேன்

ஒரு நொடி அவமானப்படுத்தி விட்ட பின்
அவர்கள்
நகர்ந்து விடுகிறார்கள் எளிதில்

அவர்களுக்கு
மீண்டும் மீண்டும்
நினைவுபடுத்துகிறேன்

குற்றவுணர்வை விட
முதலில் ஆத்திரம் கொள்கிறார்கள்
பிறகு ஆச்சரியப்படுகிறார்கள்
பிறகு களைப்பாய்
பின்சாய்ந்து
புருவம் தூக்கி
தோள் தளர்த்துகிறார்கள்
பெருமூச்சு விடுகிறார்கள்
பிறகு
மிகுந்த தன்னம்பிக்கையுடன்
கண்களை நோக்குகிறார்கள்
அப்பார்வை நம்மை கடந்து போகிறது

அவமானத்தை விட
மெலிதான துர்பலமான தற்காலிகமான
வேறொரு உறவு
இருக்க முடியுமா என்று கேட்கிறேன்
ஒரு புண்ணியவானால் போதையில் கற்பழிக்கப்பட்ட பெண்ணைப் போல்
அவர்கள் முன் நின்று
அவர்களின் பாத்யதையை
புரிய வைக்க முயல்கிறேன்

அவமானித்தவர்கள்
அது தாம் அல்ல
அப்படியே ஆனாலும்
அந்த துர்பாக்கியத்திற்கு தாம் பொறுப்பல்ல
மேலும்
அவமானிப்பது தம் இயல்பல்ல
என்று வாதிடுகிறார்கள்

நியாயமே
ஆனாலும்
அவ்வளவு அநிச்சையான ஒரு உறவு
எவ்வளவு நிச்சயமான
காரணங்களை
தந்து விடுகிறது
யார் யார் விலகிப் போனாலும்
ஒருமுறை அவமானித்தவர்
நம் கூடவே வருகிறார்கள்

அவமானித்ததை போலவே
திரும்ப அவமானிக்கவும்
மன்னிக்கவும்
நேசிக்கவும்
உதாசினிக்கவும்
வெறுக்கவும்
நாம் உரிமை எடுத்துக் கொள்ளலாம்

அப்போது
அவமானித்தவர்களை போலவே
அவமானிக்கப்பட்டவர்களுக்கும்
இயல்பற்ற ஒன்று
எவ்வளவு எளிதாக வருகிறது
என்று புரிய வரலாம்

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...