Skip to main content

இருளுக்குள் சகஹிருதயர்கள்

ஒரு அந்நிய நகரத்தில்
ஒரு சின்ன அறைக்குள்
திரைகள் மூடியிருக்க
செவ்விசை கேட்டபடி பசித்திருந்தது நினைவுள்ளது
இளம் வயது, மிகவும் இளமையென்பதால்
உள்ளே துளைத்த கத்தியை போல்
அது வலித்தது
ஏனெனில் முடியும் வரை மறைந்து இருப்பதை விட
வேறுவழி இருக்கவில்லை ---
தன்னிரக்கத்தில் அல்ல ஆனால் குறைவான வாய்ப்புகள் தந்த அவநம்பிக்கையினால்:
தொடர்புறுத்த முயன்று கொண்டிருந்தேன்.

என்னிடம் பேசியவர்கள் பழைய இசையமைப்பாளர்கள்
மொசார்டு, பாக், பீத்தோவன்,பிராம்ஸ்;
அவர்கள் உயிரோடு இல்லை.

கடைசியில், பட்டினியால் வாடி தோற்று செல்ல வேண்டி இருந்தது
குறைந்த சம்பள,
சலிப்பான வேலைகளுக்காய்
மேசைகளுக்கு பின்னால் உள்ள விநோத மனிதர்களால்
கண்களற்ற மனிதர்களால் முகமற்ற மனிதர்களால்
என் நேரத்தை பிடுங்கி
நொறுக்கி
அதில் மூத்திரம் பெய்யும்
மனிதர்களால்
நேர்முகத் தேர்வு செய்யப்பட.

இப்போது வேலை செய்கிறேன் பத்திரிகை ஆசிரியர்களுக்கு வாசகர்களுக்கு
விமர்சகர்களுக்கு

இருந்தும், கூட சேர்ந்து தண்ணியடிப்பேன்
மொசார்ட், பாக், பிராம்ஸ் மற்றும்
பீத்தோவனுடன்

சில தோஸ்துகள்
சில மனிதர்கள்
சில வேளைகளில் தனிமையில் நாம் தொடர்ந்து இயங்க தேவையெல்லாம்
நம்மை சூழும்
சுவர்களை தடதடக்க வைக்கும்
இறந்து போனவர்கள்

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...