Skip to main content

எங்குமே இல்லாத ஒரு முத்தம்




ஒரு கசப்பான முத்தம்
அவமானிப்புக்குரிய அறைதலை போல

நம் மீது
நம்மை சுற்றி
ஒரு மீட்டலின் அதிர்வலையை போல்
தொடர்கிறது
ஒரு ஈயைப் போல்
விடாமல் ரீங்கரிக்கிறது

அல்லது
அது
ஒரு அவமானிப்புக்குரிய அறைதலை விட
அதிக துன்பமானது
அதன் பக்கம்
நியாயங்களோ வெஞ்சினமோ இல்லை

அது ஒரு தண்டனை அல்ல
என்பதால்
கசப்பான முத்தம்
நம்மை
எளிதில் பலவீனப்படுத்துகிறது

நாம் கனத்த மூச்சுகளை விடுகிறோம்
உணவு கச்சிதமான சுவைகளற்று போகிறது
மிகையான மற்றொரு மொழியை பேசுகிறோம்
உண்மைகளை கத்தரித்து கையடக்கம் ஆக்குகிறோம்
வெறுப்பை உற்பத்தி செய்து மகிழ்ச்சி ஆகிறோம்
சிறுசிறு தேவைகளை பிரதானப்படுத்தி வாழ்கிறோம்
தனிமையை எளிதாக மறக்கிறோம்
ஒளியை பருகி இருட்டை மூச்சு விடுகிறோம்
முற்றுப் புள்ளிகள் அற்று எழுதப் பழகுகிறோம்

கசப்பான முத்தம் தருபவர்கள்
நம்மை அடிக்கவோ அரவணைக்கவோ
வலுவற்றவர்கள்
அவர்களிடம் பெருகும் அபரித அன்பே
கசப்பான முத்தமாக தரப்படுகிறது

அதை
வைத்துக் கொள்ளவோ மறுதலிக்கவோ
இருவராலும் முடிவதில்லை

கசப்பான முத்தத்திற்கு
ஒரு தருணம் உள்ளது
அதற்காக
இருவரும் காத்திருக்கிறோம்

கொடுத்து பெற்ற பின்
அது
நெடுடுநாள் காத்த தண்டனையை போல்
அந்நொடியில் எளிதாகி விடுகிறது

கசப்பான முத்தம்
ஒரு காயம் போல்
நம்முள்ளோ
சிலுவை போல்
நம் மீதோ
இருப்பதில்லை

அது வேறெதையோ போல்
வெளியில் இருந்து
நம் மீது
ரசவாதம் புரிகிறது

கசப்பான முத்தம்
எந்த உறவையும்
துவக்கவோ முடிக்கவோ ஏற்ற
சிறந்த பரிசு
தருபவர் குற்றவுணர்வோ
பெறுபவர் நீதியுணர்வோ
அடைவதில்லை

கசப்பான முத்தம் கிடைத்ததும்
பேசுவதோ கத்துவதோ அழுவதோ கூடாது
மிகச் சன்னமாய்
அல்லது சற்று மிகையாய்
புன்னகைக்க வேண்டும்
கைகளை நீட்டி
பட்டும்படாமல் அரவணைக்க வேண்டும்

அது கசப்பான முத்தத்தை -
எளிதாக்குகிறது
காத்திரமாக்குகிறது
ஸ்திரமாக்குகிறது
ஒரு நினைவை கூடுதலாக
சேர்க்கிறது.

அதுவரை கசப்பான முத்தம்
நடக்கப் போகும் ஒன்றைப் போல்
எங்குமே இல்லை

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...