Skip to main content

பால்மண்டலக் காதல் - அட்ரியன் ஹென்றி



அஸ்தமனத்தில் காலடிகளை வெதுவெதுப்பாக்கு
படுக்கைக்கு நாம் போகுமுன்
ஓரியனின் ஒளியில் உன் புத்தகம் படி
சிரியஸ் தலையருகே காவல் நிற்க
பிறகு எம்பி, கோள்களை அணைத்திடு
நாம் வேடிக்கை பார்ப்போம் அவை ஒவ்வொன்றாய் அணைவதை
என்னை முத்தமிடு; சொல் ஐ லவ் யூ
கடைசி அஸ்தமன சூரியனின் வெளிச்சத்தில்
நாம் எழுவோம் நாளை விடிகாலை
ஒரு புது பிரபஞ்சம் தொடங்கி ஆகிற்று

நட்சத்திர பார்வையாளன்
-         லூயிஸ் மக்நீஸ்
-         தமிழில் ஆர்.அபிலாஷ்

நாற்பது வருடங்களுக்கு முன்பு (வேறு யாருக்கும் இல்லையென்றாலும், எனக்கு இந்த எண் சற்று ஈர்ப்புடையது) அது ஒரு அற்புதமான நட்சத்திர இரவு
மேற்கே செல்லும் ரயில் காலியாக இருந்தது; இடைவழிகள் இல்லை
ஆக ஒரு பக்கத்தில் இருந்து மற்றொன்றிற்காய் விரைந்து ஓடி ஏறத்தாழ தாங்கவொண்ணா விதம் பிரகாசமான
வழக்காறற்ற காட்சியை காண முடிகிறது
விண்ணில் துளைக்கப்பட்ட ஓட்டைகள் என்னை தமது
லத்தீன் பெயர்களால் ஒரு பாதியும்
எத்தனை தொலைவில் இருந்தாலும் தமது ஒளியை அவை நெடுங்காலம் முன்பே (ஒரு சிலவற்றுக்காவது)
துறந்து விட்டிருப்பதாய் பாடபுத்தகங்களில் படித்திருப்பதால் மறுபாதியும் அவை கிளர்ச்சியுற வைத்தன
இதை இப்போது நினைக்கையில் குறித்திடுகிறேன்
அப்போது, நாற்பது வருடங்களுக்கு முன், ஒரு சிலவற்றையாவது
துறந்த ஒளி நான் பார்க்கும்படி
நேரத்துக்கு வரப்போவதில்லை, அவ்வாறு இங்கே
ஒருவழியாய் வரும் போது பக்கத்திற்கு பக்கம்
ஒரு அர்த்தஜாம ரயிலில் ஓடி அதை ரசித்து, வீணாய் பூஜ்யங்களை கூட்டி சேர்ப்பதற்கு
யாரும் உயிரோடில்லை என்பதை அறியும்

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...