Skip to main content

சின்ன தலைவலியில் இயங்கும் உலகம்



இன்று முழுக்க
ஒரு சின்ன தலைவலியுடன்
வேலைகள் செய்வதற்கு பழகுகிறேன்

எரிச்சலானவை சுவாரஸ்யமாவதும்
வழக்கமான தருணங்களில்
கோபமே வராததையும்
கவனிக்கிறேன்

சின்ன தலைவலியுடன் இருக்கும் போது
வழக்கத்துக்கு மேலாக
எதுவுமே நிகழ்வதில்லை
ஆனாலும் எனது
செயல்களுக்கு
சிறப்பாக ஒரு தகுதி கிடைத்தும் விடுகிறது

ஒவ்வொன்றையும்
கூர்மையாக கவனித்து
கச்சிதமாக துரிதமாக தயக்கமின்றி
செய்தவதற்காக
அப்போது நீங்கள் யாருமே
பாராட்டும் பாத்திரத்தில்
இருக்க வேண்டியதில்லை
எனக்காக சதா புன்னகைத்து கொள்கிறேன்

சின்ன தலைவலிக்கு
மருந்து உண்பது
ஒத்திசைவற்ற ஒரு பொய்யை
சொல்வது போன்றது
சின்ன தலைவலி
தரும் தன்னம்பிக்கையை
மருந்து ஒருபோதும் தராது

தொடர்ந்து வழங்கப்படும் தண்டனைகளை
எதிர்ப்பது
சின்ன தலைவலியின் போது
லாவகமாகிறது
தண்டனைகள் மயக்க ஊசியை போன்றவை என்றால்
சின்ன தலைவலி
நம்மை உறங்க விடுவதே இல்லை
தண்டிப்பவரின் மனதுக்கு
மிக அருகாமையில் இருப்பதால்
விழிப்பாக இருப்பது கூட
அவசியமற்றதாகிறது

போதையை விடவும்
கூர்மையை விடவும்
வாதசாமர்த்தியத்தை விடவும்
அன்பற்ற இறுக்கத்தை விடவும்
சின்ன தலைவலி
பாதுகாப்பானது
அதிகாரமிக்கவரின் குற்றங்களை போல்
பரிசுத்தமானது

சின்ன தலைவலியுடன்
தூங்க முயல்வதை விட
அல்லது விழித்து வேலை செய்வதை விட
பாசாங்கு
வேறேதும் இருக்க முடியாது
அப்போது நமக்கு
நண்பர்களோ
பகைவர்களோ இல்லை
அனைவரையும்
மௌனம் காக்க வைப்பது
மெல்ல பதற்றம் கொள்ள வைப்பது
முள்ளை விடுவிப்பது போல் அன்பை விடுவிப்பது
கத்தி முனைவில் நிறுத்தி வைப்பது
இயல்பான ஒன்றாகிறது

வலியும் இன்பமும் துய்ப்பதற்கான
காரியங்கள்
என்று நம்புகிறோம்
ஒன்றை மறப்பதும்
மற்றதை நீட்டிப்பதும்
இவ்வளவு மெத்தனமாய் நகரும் வாழ்வுக்கு
செய்யும் அநீதி

ஒரு சின்ன தலைவலி
மிகப் பெரிய வலியாகவோ
மிக சிறந்த இன்பமாகவோ
ஆகும் போது தான்
‘நாம் மிக கவனமாக வேண்டும்
அப்போது
அவர்களுக்கு
அது வந்து விட்டதென்று அர்த்தம்
பின்
சின்ன தலைவலியுடன்
இயங்கும் உலகை
அசூயையுடனும் அச்சத்துடனும் கவனிக்க ஆரம்பிக்கிறீர்கள்

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...