Skip to main content

மரணத்தை மெல்ல பற்றி




காலை வெயிலுக்கு பின்னரும்
தங்கிடும் கொசுக்கள்
எண்ணிக்கையில் குறைவானவை
உருவத்தில் பெரியவை
போதையில் சலம்பும் நள்ளிரவு குடிகாரர்களை போல்
அவை உடலில் அமர்ந்திருக்க
காற்றில் மெல்ல நடுங்குகின்றன
அவை கடிப்பதே இல்லை
அல்லது தெரியாதபடி மிருதுவாக கடிக்கும்
பரிணாமத்துக்கும் அழிவுக்கும்
நடுவிலான
இக்கொசுக்கள்
அடிக்கப் போகும் நம் கையின்
நிழலை
காண்பதில்லை அல்லது அலட்சியப்படுத்துகின்றன
நீங்கள் வேகமாகவோ மெல்லவோ அசைந்தபடியோ
அடிக்கலாம்
திட்டமிடலும் சூழ்ச்சியும் வஞ்சகமும்
அவை முன் தோற்கின்றன
அடித்த உடன்
அவை ரத்தம் சிந்துவதில்லை
கொசுவின் ரத்தம் எவர் ரத்தம்?
ரத்தம் தெறிக்கும் போது
நாம் இதை கேட்பதில்லை
நம்மிடம் இருந்து
மிக காருண்யமான ஒரு அடியையே
அவை வேண்டுகின்றன
அதனால்
ஒரு செல்லப்பிராணியை போல்
நாம் அதை அன்பாக தட்டுகிறோம்
அடிபட்ட பின்
அவை சிதைவது இல்லை
உருண்டோடி பக்கத்தில்
எங்காவது விழுந்து
காணாமல் போகின்றன
சிறிது நேரம் தேடி விட்டு ஓய்கிறோம்
வற்புறுத்தாமல் வலியுறுத்தாமல் எதையும்
உறுதி செய்யாமல் உயிர் பிரியும் அவை
ஒரு வேளை நம்
முழங்கையில் இருந்த போதே
இறந்து விட்டிருந்தனவா
என்று நினைக்கும் போது
நமக்கு லஜ்ஜை ஏற்படுகிறது

காலை வெளிச்சத்தை அருந்தியபடி இருக்கும்
கொசுக்கள்
உறுதியின்மையால்
நம்மை வியப்பூட்டுகின்றன
மரணத்தின் விரலை
அவை
மிருதுவாக பற்றி இருக்கின்றன
எதையும் எதிர்பார்த்து இருக்கும் போது
எதுவும் நிகழ்வதில்லை
என் நாளை ஆரம்பிக்கும் பரபரப்பு
தொற்றும் முன்
இதோ அடுத்த கொசு
கட்டை விரலில் அமர்ந்து
மெல்ல தியானிக்கிறது

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...