Skip to main content

தென்னாப்பிரிக்க டெஸ்டு தொடர் அம்பலமாக்குவது என்ன?



இந்திய அணி உள்ளூர பீதியுற்று இருக்கிறது என்பதைத் தான். 16 டிடம்பர் 2010 தொடங்கிய டெஸ்டு ஆட்டத்தின் முதல் நாளில் ஆடுகளம் பந்து வீச்சுக்கு எந்தளவுக்கு ஆதரவு அளித்தது என்பது விவாதத்துக்கு உரியது. ஸ்விங் குறைவாகவே இருந்தது.
மழைக்கால இங்கிலாந்து ஆடுதளங்களுடன் ஒப்பிட்டால் சூப்பர்ஸ்போர்ட் பார்க்க் ஆடுதளத்தின் குணாதசியம் விளங்கும். இந்த ஆடுதளம் சற்று மெதுவாக ஆனால் எகிறக் கூடியதாக இருந்தது. தென்னாப்பிரிக்க வீச்சாளர்கள் குறைவாகவே ஸ்விங் செய்தார்கள். அவர்களது ஸ்விங் அல்ல, வேகமும் பந்தின் உயரமுமே மட்டையாளர்களை அடிப்படையில் அச்சுறுத்தியவை. இந்திய மட்டையாளர்கள் உயரப்பந்தை சந்திக்கும் கச்சிதமான தொழில்நுட்பம் கொண்டவர்கள் அல்ல. இது நமக்குத் தெரிந்தது தான். ஆனால் உயரப்பந்தை ஆட ஒருவர் ரிக்கி பாண்டிங்காக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒன்றில் உயரப்பந்தை ஆடுவதில் அசௌகரியம் இல்லை என்று வீச்சாளருக்கு உணர்த்தும் படியாக தடுப்பாட்டம் ஆட வேண்டும். அல்லாவிட்டால் உயரப்பந்துகளை அடித்தாடி அதிக ஓட்டங்கள் எடுக்க வேண்டும். முதல் நாளில் தோனி இதைத் தான் செய்தார். சமன் செய்ய அவர் கத்திரிக் கோல் போல காலை தூக்க வேண்டி வந்தாலும் கூட உயரப் பந்துக்கு அவர் அதிரடியாய் ஓட்டங்கள் எடுக்க ஆரம்பித்ததும் தென்னாப்பிரிக்கர்களின் வீச்சு நீளம் முழுமையான நீளமாக மாறியது. மாறாக திராவிடும் காம்பிரும் லக்‌ஷ்மணும் ஆடுதளத்தில் ஆழமாக நின்று உயரப் பந்தை சமாளிக்க முயன்றனர். குறிப்பாக ஊக்கமற்ற தடுப்பாட்டம் இவர்களின் அச்சத்தை பட்டவர்த்தமாக்கியது. இது பந்து வீச்சாளர்களை ஊக்குவித்தது.

அச்சம் ஆட்டக்காரர்களுக்கு பொதுவானது என்றாலும் தந்திரம் அதை வெளிக்காட்டாமல் இருப்பது தான். இதனாலே கிரிக்கெட்டை ஒரு உளவியல் ஆட்டம் என்கிறார்கள். உயரப்பந்துக்கு தகுந்த பதிலை தர முடியாவிட்டால் இந்த தொடரில் இந்தியாவால் ஒரு இன்னிங்சில் நூறு ஓட்டங்களுக்கு மேல் எடுக்க முடியாது. சங்கீத மேடையில் ஊமைகளுக்கு என்ன இடம்?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...