Skip to main content

நாவலின் தகவல்கள் எத்தகையவை?


நாவலின் சமையற்குறிப்பு எனும் பதிவில் ஜெயமோகன் நாவலில் சித்தரிப்பும், தகவல்களை அடுக்கிக் கொண்டே போவதன் முக்கியத்துவத்தை பற்றி சொல்கிறார். உதாரணமாக ஒரு விஷ்ணுபுர பாணியிலான சித்தரிப்பை விளக்குகிறார். எப்போதுமே ஒரு செயலை சுருக்கி சொல்ல நாவலில் முயலக் கூடாது என்கிறார். அவன் கதவைத் திறந்தான் என்று எழுதுவது நாவல் அல்ல, கதவின் நிறம், நீள் அகலம், அறையின் வெளிச்சம் அல்லது இருள், சுற்றிலும் ஊறி வரும் ஒலிகள் என்று பல்வேறு தகவல்களை தந்து எழுதுவதே உத்தமம் என்கிறார். தனது கருத்தை அவர் இப்படி பொதுமைப்படுத்தலாமா என்ற விவாதத்தை பின்னால் வைத்துக் கொள்வோம். நான் இதை எழுத முற்பட்டது வேறொரு குழப்பத்தை தீர்க்க.

நாவல் தகவல்களால் உருவானது என்பது சரிதான். ஆனால் இத்தகவல்களின் நோக்கம் என்ன? ஜெயமோகன் இத்தகவல்கள் வாசகனின் மனதை ஒன்ற வைக்க பயன்படும் என்று மட்டும் சொல்லி செல்கிறார். படுக்கையை தூங்க மட்டும் பயன்படுத்துகிறோம் என்பது போன்றது இது. நுண்மையான, விரிவான தகவல்கள் இலக்கியத்தனமான, ஜனரஞ்சகமான நாவல்களில் உள்ளனதாம். அவை எப்படி வேறுபடுகின்றன என்பது முக்கியம். நல்ல நாவல்களில் தகவல்கள் தனியாக ஒரு கதை சொல்கின்றன. அவை உருவகமோ குறியீடோ படிமமோ ஆகின்றன. குறைந்த பட்ச தகவல்கள் சுவாரஸ்யத்தை நிலைக்க வைக்கவும், கதையை நம்பும்படி செய்யவும் பயன்படுகின்றன. உதாரணமாக ஜெயமோகனின் பெரும்பாலான எழுத்துக்களில் தகவல்கள் உருவகமாகின்றன. விஷ்ணுபரத்தை கா.நா.சுவின் பித்தப்பூவுடன் ஒப்பிட்டு பாருங்கள். பித்தப்பூவில் தகவல்கள் இப்படி உருவகமாவதில்லை. வர்ணனை தகவல்கள் ஒரு மனநிலையை உருவாக்கவும் பயன்படலாம். சிறந்த நாவல்களில் தகவல்களில் அவதானிப்புகள் பொதிந்துள்ளன. சில இலக்கிய நாவல்கள் கதைக்கோ மையநோக்கிற்கோ வளம் சேர்க்காத கலாச்சார, சமூகவியல் தகவல்களுக்காக மட்டுமே வெளிச்சம் பெற்றவை; தொடர்ந்து வாசிக்கப்படுபவை. உதாரணமாக, நீலபத்மநாபனின் தலைமுறைகள், பாமாவின் கருக்கு. ஜனரஞ்சக நாவல்களில் தகவல்கள் வெறுமனே சுவாரஸ்யத்துக்காக மட்டும் தொடர்ந்து அளிக்கப்படும். தகவல்களின் கிளர்ச்சிக்காகவே படிக்கிறோம். ஆர்தர் ஹெய்லி போன்றவர்கள் உதாரணம்.

சுருக்கமாக இலக்கியத்தில் தகவல்கள் வெறும் மசாலா அல்ல. ஊமையான தகவல்கள் தாம் சீரியசான் நாவல்களை மிக சலிப்பானவை ஆக்குகின்றன. ஜான் அப்டைக்கின் Rabbit is Rich படித்த போது எனக்கு இந்த பிரச்சனையே ஏற்பட்டது. ஒரு சூழலை நிறுவுவதற்கு, பொருண்மையான அடித்தளம் அமைப்பதற்கு ஓரளவு தகவல்களை குழைத்து நாவலை கட்டலாம். ஆனால் அதைவே தொடர்ந்து ஒரு நாவலாசிரியன் செய்தால் நாம் புத்தகத்தை குளிர்பதனப்பெட்டிக்குள் வைக்க வேண்டியது தான். ஆக தகவல்களின் ஆழம் பொறுத்து நாவல் ஒன்றின் தரத்தை நாம் கண்டறியலாம்.

ஜெயமோகனை குற்றம் சொல்ல நான் இதை எழுதவில்லை. அவர் இதே விசயத்தை 98இல் ஒருமுறை என்னிடம் சொல்லி இருக்கிறார். அப்போது நான் மிகவும் குழம்பியிருக்கிறேன். தவறு அவர் சொன்ன விதத்திலா அல்லது நான் விஷயங்களை ஜீரணிக்கும் முறையிலா என்பது உறுதியில்லை. காரணகாரிய முறையில் புரிந்து கொள்வதே எனக்கு வசதி. இதை எனக்கு நானே சொல்வதாகவோ என்னைப் போன்று சிந்தனை முறை கொண்டவர்க்கு என்றோ உத்தேசிக்கிறேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...