Skip to main content

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 24





 கதவு சற்று திறக்க மிகத் தயக்கமான முறையில் நிழல்களில் இருந்து ஒரு பெண் கேட்டாள்: “என்ன வேண்டும்?
ஒருவேளை பிரக்ஞையற்ற, அதிகாரத்துடன் அம்மா பதிலுரைத்தாள்: “ நான் லூயிசா மார்க்வெஸ்
பிறகு தெருக்கதவு முழுக்கவே திறந்தது, அதோடு இரங்கல் ஆடையில் ஒரு வெளிறிய, எலும்புகள் புடைத்த பெண் தோன்றி ஆவி உலகத்தில் இருந்து எங்களைப் பார்த்தாள். உள்ளறையின் பின்னில் இருந்து மேலும் ஒரு முதிய மனிதர் நிரந்தர நோயாளியின் நாற்காலியில் ஆடினார். பல வருடங்களுக்குப் பின் இந்த வீட்டை வாங்க விருப்பம் தெரிவித்த குடியிருப்போர் இவர்கள் தாம்; ஆனால் அவர்களிடம் வாங்குவோருக்கான தோரணை இல்லை; மேலும் யாருக்கும் ஆர்வம் ஏற்படுத்தும் நிலைமையில் வீடு இல்லை. என் அம்மாவுக்கு கிடைத்த தந்தியின் படி குடியிருப்போர் பாதி விலையை பணமாக தர ஏற்றுக் கொண்டிருந்தனர்; அதற்கு அவள் ரசீது ஒப்பிட்டுத் தர வேண்டும்; மிச்சப் பணம் வருட முடிவில் ஒப்பந்தங்கள் முடிவான பின் தரப்படும்; ஆனால் ஒரு வருகை ஏற்பாடாகியது யாருக்கும் நினைவில்லை. செவிடர்களுக்கு இடையிலான ஒரு நீண்ட உரையாடலுக்கு பின், எவ்வித உடன்படிக்கையும் நிலுவையில் இல்லை என்பது மட்டும் தெளிவானது. இந்த மூடச்செயல் மற்று பயங்கர வெக்கையால் ஆட்கொள்ளப்பட்டு என் அம்மா வியர்வையில் குளித்து சுற்றுமுற்றும் குறும்பார்வை இட்டாள். பிறகு பெருமூச்சு விட்டாள்.
“இந்த பாவம் வீடு ரொம்ப நாட்கள் தாங்காது
“அதை விட மோசமாக உள்ளது”, அந்த மனிதர் சொன்னார், “இது எங்களைச் சுற்றி இடிந்து விழவில்லை என்றால் அது நாங்கள் பராமரிக்க செய்த செலவினால் தான்.
வாடகையிலிருந்து கழிக்கப்பட்டவை போக நாங்கள் அவர்களிடம் கடன்பட்டுள்ளதாய் கொள்ளும்படி சீர்செய்யும் வேலைகளுக்கான ஒரு பட்டியல் அவர்களிடம் இருந்தது. சிரமமே இல்லாமல் எப்போதும் அழக்கூடிய என் அம்மாவால் வாழ்வின் பொறிகளை சந்திக்கும் பயங்கர தைரியம் காட்டவும் முடியும். அவள் நன்றாக விவாதித்தாள்; நான் குறிக்கிட இல்லை, ஏனெனில் முதல் திடுக்கிடலுக்கு பின் வாங்குபவர்களின் நியாயம் சரி என்று புரிந்தது. தந்தி செய்தியில் விற்பனைக்கான நாள் மற்றும் முறை பற்றி தெளிவா ஏதுமில்லை; இருந்தும் அது ஏற்பாடு செய்யப்பட்டதாய் புரிந்து கொள்ளப் பட்டது. எங்கள் குடும்பத்தின் ஊகிக்கும் பணிக்கு வழக்கமானதே இந்த சூழ்நிலை. தந்திச்செய்தி வந்த அதே கணத்தில் உணவு மேஜையில் இந்த முடிவு எப்படி எடுக்கப்பட்டிருக்கும் என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது. என்னையும் சேர்க்காமல், சம உரிமைகளோடு பத்து சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் இருந்தனர். இறுதியில் அம்மா சில பிசோக்களை அங்கிங்காய் சிரமப்பட்டு சேகரித்து தனது பள்ளிக்கூட பையை கட்டி திரும்ப வருவதற்கான கட்டணம் தவிர வேறேதுமின்றி கிளம்பி விட்டாள்.

ஆரம்பத்தில் இருந்து எல்லாவற்றிலும் என் அம்மாவும் அந்த பெண்ணும் திரும்ப பேசினர்; அரைமணி நேரத்துக்கு எந்த ஒப்பந்தமும் இல்லை என்று நாங்கள் முடிவு செய்து விட்டோம். வீட்டின் மீதான பணய உரிமை ஒன்றும் இந்த மாற்றம் இல்லாத முடிவுகளில் சேரும்; ஒரு உறுதியான விற்பனை பல வருடங்களுக்குப் பின் ஒரு வழியாக நடக்கும் வரை அது சரிசெய்யப் படவில்லை. ஆக அதனால் அப்பெண் அதே கொடிய விவாதத்தை மற்றொரு முறை திரும்ப செய்ய முயன்ற போது அம்மா தனது வசீகரமற்ற முறையில் அதிரடி நடவடிக்கைகளை பயன்படுத்தினாள்.
இந்த வீடு விற்பனைக்கு அல்ல”, அவள் சொன்னாள், நாங்கள் இங்கே பிறந்தோம், இங்கே தான் இறப்போம் என்பதை நினைவு கொள்வோமாக
மதியத்தின் மிச்சத்தை அந்த பேய்வீட்டில் பழைமை ஏக்க நினைவுகளை அசை போட்டு திரும்பச் செல்லும் ரயில் வரும் வரை செலவழித்தோம். அவை எல்லாம் எங்களுடையதே; ஆனால் தெருவை எதிர்நோக்கிய என் தாத்தாவின் அலுவலக அறைகளாக விளங்கின அலுவலக பகுதி மட்டுமே புழக்கத்தில் இருந்தது. மிச்சம் எல்லாம் பல்லிகளின் கருணைக்கு விடப்பட்ட சிதைந்து போகும் சுவர்களும் துருப்பிடித்த தரகக் கூரைகளும் கொண்ட ஒரு ஓடு மட்டுமே. வாசலில் அதிர்ச்சியுற்ற என் அம்மா தனது தீர்மானமான முறையில் கூவினாள்: “இது அந்த வீடு அல்ல”. ஆனால் அது எதுவென்று அவள் சொல்லவில்லை; ஏனெனில் என் பால்யத்தின் போக்கில் அது எந்த அளவுக்கு மாறுபட்ட முறைகளில் விவரிக்கப் பட்டதென்றால் குறைந்த பட்சம் சொல்பவருக்கு ஏற்றபடி வடிவமும் திசையும் மாறுகின்ற. மூன்று வீடுகள் இருந்தன. நிஜமான வீடு என் பாட்டி தன் பழிப்பு பாணியில் சொல்ல நான் கேட்டதுபடி ஒரு செவ்விந்தியக் குடில். இரண்டாவது, என் தாத்தா பாட்டியால் கட்டப்பட்டது; மூங்கில் மற்றும் சேற்றால் கட்டப்பட்டு ஒரு கசப்பு பனைமரக்கூரை கொண்டது; பெரிய நன்கு வெளிச்முள்ள ஓய்வறை, பளீர் வண்ணப்பூக்கள் கொண்ட மொட்டை மாடியைப் போன்ற ஒரு உணவருந்தும் அறை, இரண்டு படுக்கை அறைகள், ஒரு பிரம்மாண்ட செஸ்னட் மரம் கொண்ட முற்றம், நன்கு பராமரிக்கப்பட்ட ஒரு தோட்டம் மற்றும் ஆடுகள் பன்றிகள் மற்றும் கோழிகளோடு அமைதியான தோழமையுடன் வாழ்ந்த ஒரு கால்நடைப்பட்டி ஆகியவற்றையும் அது கொண்டிருந்தது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...