Skip to main content

பைத்தியங்கள் என்னை எப்பொதும் நேசித்தனர் - புக்காவஸ்கி





அத்தோடு மந்தபுத்திகளும்

ஆரம்பப் பள்ளியில்
ஜூனியர் உயர்பள்ளியில்
உயர் நிலை பள்ளியில்
ஜூனியர் கல்லூரியில்
வேண்டப்படாதவர் தங்களை
என்னோடு
இணைத்துக் கொள்வர்

ஒற்றைக் கையர்கள்
முகத்தசை இழுப்புடையோர்
பேச்சுக் குறைபாடுடையவர்
ஒற்றைக் கண்ணின் மேல்
வெண்படலம் கொண்டவர்
பயந்தாங்கொள்ளிகள்
மானிட வெறுப்பாளர்கள்
கொலைகாரர்கள்
ஒளிந்துபார்க்கும் கிறுக்கர்கள்
மற்றும் திருடர்கள்

தொழிற்ச்சாலைகளில் எல்லாம்
என் குண்டிக்கு பின்னும்
வேண்டப்படாதவர்களை என்பால்
கவர்ந்தேன்

உடனடியாய்
அவர்கள் என்னை கண்டு கொண்டனர், என்னோடு
ஒட்டிக் கொண்டனர், இப்போதும்
கூட அவர்கள் அதைச் செய்வதுண்டு.

இப்போதிருக்கும் அண்டைப்பகுதியில்
என்னை கண்டுகொண்ட
ஒருவன் இருக்கிறான்.
குப்பை ரொம்பிய
ஓரு ஷாப்பிங் தள்ளுவண்டியை
தள்ளிச் செல்வான்:
உடைந்த கழிகள், ஷூ வார்இழைகள்,
காலி உருளைக்கிழங்கு வறுவல் பைகள்,
பால்பைகள், தினசரிகள், பேனா வைப்பான்கள்...
"என்ன நண்பா எப்படிக்கீறே?"
நான் நிற்பேன், நாங்கள் சற்று நேரம்
பேசுவோம்

பிறகு நான் வணக்கம் சொல்லிப் பிரிவேன்.
ஆனால் அவன் என்னைப்
பின்தொடர்வான்.

பீர் கடைகள்
காதல் கடைகள்
கடந்து
"எனக்கு அறிவூட்டு
நண்பா, அறிவூட்டு.
என்ன நடக்கிறது என்பது
எனக்கு அறிய வேண்டும்"

இவன் புதியவன்
வேறு யாரிடமும்
இவன் பேசி
நான் இதுவரைப் பார்த்ததில்லை

தள்ளுவண்டி
எனக்குப் பின்னால்
கலகலத்து சற்று வருகிறது

பிறகு எதுவோ
கீழே விழுகிறது
அதை எடுக்க
அவன் நிற்கிறான்

அவன் அவ்வாறு செய்ய நான்
முனையில் உள்ள
பச்சை உணவகத்து
முன்கதவு வழியாக
நடந்து செல்கிறேன்

பொதுஅறையைத்
தாண்டி
பின்கதவுக்கு வந்து
சேர்கிறேன், மேலும்
அங்கு ஒரு பூனை
முழு ஆனந்தத்தில்
பீ இடுகிறது
அது என்னைப் பார்த்து
இளிக்கிறது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...