Skip to main content

ஒரு விபரீத நாள் - சார்லஸ் புக்காவஸ்கி





 ஹாலிவுட் பார்க்கில் வெக்கையான, சோர்வான நாட்களில் ஒன்றான அன்று

பெருங்கூட்டத்துடன்,

 சோர்வுறும், முரட்டுத்தனமான, முட்டாள்

 கூட்டம்



கடைசிப் போட்டியில் வென்று விட்டேன், வாங்குவதற்கு காத்திருந்தேன்,

என் காரை நெருங்கிய போது

அப்பகுதியிலிருந்து வெளியேற முயல்வதற்கான

ஒரு பிரம்மாண்ட போக்குவரத்து நெரிசல்


ஆக என் ஷூக்களை கழற்றினேன், காத்திருந்தேன், வானொலியை

இயக்கினேன், அதிஷ்டவசமாய் சிறிது பாரம்பரிய இசை ஒலித்தது, ஒரு பின்ட்

ஸ்காட்ச் காரின் சின்ன சேமிப்பறையிருந்தது,

மூடியைத் திறந்து ஒரு மடக்கு



இவர்களெல்லாம் இங்கிருந்து கிளம்பும்வரை பொறுத்திருப்பேன்,

நான் எண்ணினேன், பிறகு நான் கிளம்புவேன்

முக்கால் சிகர் கிடைத்தது, பற்ற வைத்தேன், மற்றொரு

ஸ்காட்ச் மடக்கு

இசை கேட்டேன், புகை பிடித்தேன்,

ஸ்காட்ச் அருந்தினேன், தோற்றவர்கள் கிளம்புவதை

வேடிக்கை பார்த்தேன்


100 யார்டுகள் கிழக்கே 

மட்டமான சிறு ஆட்டமொன்று வேறு

நடந்து கொண்டிருந்தது



பிறகு அதுவும் முடிந்தது

விஸ்கியை காலி செய்ய முடிவு செய்தேன்


அப்படியே செய்து, பின் இருக்கையில்

கால் நீட்டி படுத்தேன்.


எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேன்

என்று தெரியாது

ஆனால் நான் விழித்தபோது இருட்டியிருந்தது

வண்டி நிறுத்துமிடம் காலியாயிருந்தது


ஷுக்களை மாட்ட வேண்டாமென தீர்மானித்து, காரை இயக்கி

அங்கிருந்து வெளியேறினேன்


என் இடத்தை அடைந்த போது

தொலைபேசி மணியடிப்பது கேட்டது


சாவி நுழைத்து கதவைத் திறந்த போது

தொலைபேசி தொடந்து மணியடித்தது


நடந்து சென்று

தொலைபேசியை எடுத்தேன்


"ஹலோ"


"தேவடியா மவனே எங்கே போயிருந்தாய்"


"ஓடுதளத்துக்கு"


"ஓடுதளமா? மணி இப்போது 12:30 a.m.!

7 p.m. இலிருந்தே உன்னை அழைத்துக்

கொண்டிருக்கிறேன்"


"ஓடுதளத்திலிருந்து இப்போது தான்

வந்தேன்"


"எவகூட இருந்தே அங்கே"


"இல்லை"

"உன்னை நம்ப மாட்டேன்"

தொலைபேசியை வைத்தாள்.


குளிர்பதன பெட்டியிடம் சென்றேன், பீர் ஒன்று எடுத்தேன்,

குளியலறை போனேன்,

தொட்டியில் நீர் திறந்து விட்டேன்.

பீரை தீர்த்தேன், மற்றொன்று எடுத்தேன், திறந்தேன்,


தொட்டிக்குள் இறங்கினேன்.

தொலைபேசி மீண்டும்

அடித்தது


பீரோடு தொட்டியிலிருந்து வெளியேறினேன்,

சொட்ட சொட்ட

தொலைபேசியிடம் சென்றேன்,

அதை எடுத்தேன்


"ஹலோ"

"தேவடியா பையா, நான்

இப்போதும் உன்னை நம்பவில்லை"


அவள் துண்டித்தாள்.

எனது பீரோடு நான் தொட்டிக்கு திரும்ப நடந்து சென்றேன்

மற்றொரு நீர்த் தடத்தை

பின் விட்டு


நான் தொட்டியை அடைந்த போது

தொலைபேசி மீண்டும்

அடித்தது


அதை அடிக்க விட்டேன், மணி ஒலிகளை

எண்ணியபடி: 1,2,3,4,5,6,7,8,9

10,11,12,13,14,15,

16 ...

அவள் வைத்தாள்.

பிறகு , ஒருவேளை, 3 அல்லது 4 நிமிடங்கள்

கழிந்திருக்கும்.


தொலைபேசி மீண்டும்

அடித்தது.


மணி ஒலிகளை எண்ணினேன்:

1,2,3,4,5,6,7,8

9


பிறகு

அமைதி


அப்போது காரில் என் ஷூக்க்ளை

மறந்து விட்டிருந்ததை

நினைவு கூர்ந்தேன்.


பரவாயில்லைதான், என்னிடம்

ஒரு ஜோடி மட்டுமே இருந்தது என்பதைத் தவிர.


அந்த காரை ஒருபோதும் யாரும்

திருட விரும்ப மாட்டார்கள்

என்பதற்கு, ஒருவேளை, வாய்ப்பிருந்தது.


தொட்டியை விட்டு இறங்கினேன்

மற்றொரு பீருக்காக

மற்றொரு தடத்தை

பின்னால் விட்டு


அது ஒரு

நீண்ட

நீண்ட

நாளின்

முடிவு.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...