Skip to main content

3d-இன் இரண்டு பக்கங்கள்: அவதாரும் கண்வலியும்



3d எனப்படும் முப்பரிமாணப் படங்களுக்கு ஹாலிவுட்டில் தனித்த வரலாறு உண்டென்றாலும் நம் கற்பனையை பாதித்தவை மை டியர் குட்டிச்சாத்தானும் அவதாரும். மேற்கில் 3d டி.வி தொடர்கள் பல ஒளிபரப்பப்பட்டுள்ளன. அத்தகைய தொடர்களின் போது டி.வி திரையின் ஓரமாய் குறிப்பு அளிக்கப்படும். உடனே பிரத்தியேக கண்ணாடியை அணிந்து கொள்ள வேண்டும். இப்போது 24 மணிநேர முப்பரிமாண டி.வி சேனலை ஸ்கை நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. கண்ணாடி தேவைப்படாத 3d தொழில் நுட்பமும் அண்மையில் உள்ளது. பொதுவாக முப்பரிமாண படைப்புகளுக்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பு பானசோனிக், சோனி, பிலிப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு 3d தொலைக்காட்சிகளை அறிமுகப்படுத்த பெரும் உற்சாகம் அளித்துள்ளது. இவ்வருடம் வெளிவரப் போகும் முப்பரிமாண தொலைக்காட்சி இந்தியர்களுக்கு வெறும் செய்தி சுவாரஸ்யமாக மட்டுமே இருக்கும். அதிக விலை, 3d புளூரே டிஸ்குகள் இந்திய சந்தையை எளிதில் அடையாமை, 3d தொழில்நுட்பத்தை இந்திய காட்சி ஊடகங்கள் வரிப்பதற்கான சாவகாசம் மற்றும் வணிக சாத்தியம் ஆகியன காரணங்கள். தோற்ற அளவிலேனும் முப்பரிமாண கணினி மற்றும் கைப்பேசிகள் நம் எதிர்கால தொடர்புலகை அணுக்கமாக்க போகின்றன் என்பதில் சந்தேகமில்லை. எளிதில் நமது அன்றாட உலகில் 2d மெல்ல மெல்ல மறைந்து 3d ஆக்கிரமிக்கும். பள்ளிகளில் குழந்தைகளுக்கு அறிவியலை முப்பரிமாண திரைகளில் கற்பித்தால் அபாரமான ஈடுபாட்டை உருவாக்கலாம். அதே போன்று 3g கைப்பேசி காட்சி அரட்டையில் விடப்படும் 3d முத்தங்களோ அறைகளோ நம் பிரக்ஞையில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுத்தும்? நம் மொழிப்படிமங்கள் எப்படி மாறும்? இப்படி கற்பனை செய்து கொண்டே போவதற்கு ஒரு வேகத்தடை தேவையுள்ளது. இப்போதைக்கு முப்பரிமாண காட்சிகளின் பக்கவிளைவுகள்.

உலகம் முழுக்க அவதார் திரைப்படம் மனதை பிரமிக்க வைத்த அளவு உடலையும் பாதித்துள்ளது. இப்படத்தை முப்பரிமாணத்தில் பார்த்தவர்களில் பலருக்கு தலைவலி, தலைசுற்றல், வாந்தி உனர்வு, பார்வை மங்கல் போன்ற பல உபாதைகள் ஏற்பட்டுள்ளன. ஏன்?

3d என்பது ஒரு செயற்கையான காட்சி அனுபவம். விளக்குகிறேன். இயல்பு வாழ்வில் மேலிருந்து கீழாக அல்லது தூரத்திலிருந்து பக்கத்திற்கு வரும் பொருளை தெளிவாக காண நம் கண்ணின் லென்ஸ் தன்னை தகவமைக்கும். மேலும் விளங்க உங்கள் சுட்டு விரலை தலைக்கு மேலிருந்து மூக்கு நோக்கி இறக்குங்கள். கண்கள் சுழல்கின்றன. இப்படி சுழன்று உள்நகரும் போது நம் லென்ஸ் உருமாறுகிறது. ஆனால் முப்பரிமாணக் காட்சியின் போது ஒரு பக்கம் லென்ஸ் தகவமைந்தாலும் மற்றொரு பக்கம் நிலையான திரையிலும் கண்ணை நிலைக்க வைக்க வேண்டியுள்ளது. அன்றாட வாழ்க்கையிலும் இருவேறு திசையிலுள்ள பொருட்களில் பார்வையை நிலைக்க வைப்பது கண்ணுக்கு களைப்பானது என்பதை கவனியுங்கள். 3dயின் போது இவ்வாறு செயற்கையான விழியசைவுகள் தேவைப்படுவதால் கண்கள் களைப்பாகி வெவ்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.

எதிர்கால 3d யுகத்தில் அறிவியலுக்கு இது ஒரு சவால் தான். ஒவ்வொரு சவாலை வெல்லவும் ஒரு மார்க்கம் நிச்சயம் உண்டு. பார்மசுயூட்டிக்கல் நிறுவனங்களின் தவறை தொழில்நுட்ப நிறுவனங்கள் தவிர்க்க பொறுமை காக்க வேண்டும். கத்திரிக்காவில் இருந்து முப்பரிமாணம் வரை புதிய தொழில்நுட்பங்கள் மக்களிடம் செல்லும் முன் அரசாங்கம் கவனமாக மற்றும் கராறாக பரிசீலிக்க வேண்டும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...