Skip to main content

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 12



என் குழந்தைப் பருவத்திலும் கூட சிறு நகரங்களை ஒன்றை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்துவது எளிதாக இருந்ததில்லை. இருபது வருடங்களுக்குப் பிறகு சௌந்தரிய அமைதி ததும்பும் பெயர்களை --- துகாரின்கா, குவாமச்சிட்டேசு, நிர்லாண்டியா, குவாகாமயால் -- ஏந்திய பலகைகள் ரயில்நிலைய வராந்தாக்களில் வீழ்ந்து கிடக்க, அவை நினைவிலுள்ளதைக் காட்டிலும் அதிகமாய் தனிமைப்பட்டு விட, இது, மேலும் சிரமமாகி விட்டது.
ஏறத்தாழ காலை 11:30 மணிக்கு ரயில் செவில்லகாவில் தண்ணீர் பிடிக்கவும், இயக்குப்பொறி மாற்றவும் 15 நிமிடங்கள் முடிவற்று நின்றது. அப்போதுதான் வெக்கை அதிகமாகியது. வண்டி நகர ஆரம்பித்த போது, புதிய இயக்குப்பொறி தொடர்ச்சியாய் வெடித்துக் கக்கிய கரிப்புகை, கதவற்ற ஜன்னல்கள் வழி புகுந்து எங்களை கரும்பனியில் மூடியது. பாதிரியாரும், பெண்ணும் ஏதோ தெருவில் எங்களுக்குத் தெரியாமல் ஏற்கனவே இறங்கி விட்டிருந்தனர். எனக்கும் அம்மாவுக்கும் நாங்கள் ஒரு பேய் ரயிலில் பயணிப்பதான உணர்வை இது தீவிரப்படுத்தியது. எனக்கெதிரே அமர்ந்து, ஜன்னலுக்கு வெளியே நோக்கியவாறு அவள் இரண்டு மூன்று தடவை குட்டித்தூக்கம் போட்டாள். ஆனால் நன்கு விழிப்பு தட்டியபின், மீண்டும் அந்தப் பயங்கர கேள்வியை கேட்டாள், "சரி நான் உன் அப்பாவுக்கு என்ன சொல்ல?"

என் முடிவை தகர்ப்பதற்கு வாகான இடத்தை கண்டுபிடிப்பதற்கான தேடலை அவள் ஒருபோதும் கைவிட மாட்டாள் என்று தோன்றியது. இதற்கு முன் அவள் முன்வைத்த சில சமரசங்களை எடுத்த எடுப்பிலே நிராகரித்து விட்டிருந்தேன். அவளது பின்வாங்கல்கள் ரொம்ப நேரம் நீடிக்காது என்று எனக்கு தெரிந்தது. இருந்தும் இந்த புதுத்தாக்குதல் எனக்கு அதிர்ச்சி தந்தது. இதற்கு முன்னால் இல்லாத அதிக நிதானத்துடன், மற்றொரு நீண்ட பயனற்ற மோதலுக்கான தயார் நிலையில் பதிலுரைத்தேன்.

"என் வாழ்க்கையில் நான் ஆசைப்படுவதெல்லாம் எழுத்தாளனாக வேண்டும் என்பதே. அதுதான் நடக்கப் போகிறது என்று அவருக்கு சொல்லுங்கள்"

"அவர் உன் விருப்பத்திற்கு எதிரானவரல்ல", அவள் சொன்னாள், "நீ எதிலாவது பட்டம் வாங்கும் வரை"

என்னைப் பார்க்காமலே பேசினாள், ஜன்னலுக்கு வெளியே நிகழும் வாழ்க்கையில் இருப்பதை விட மிகக்குறைவான ஆர்வமே எங்கள் உரையாடலில் அவள் கொண்டிருப்பது போன்ற பாசாங்குடன்.

" நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று மிக நன்றாய் தெரிந்திருந்தும் ஏன் இவ்வளவு வற்புறுத்துகிறாய் தெரியவில்லை", நான் அவளிடம் சொன்னேன்.

ஆர்வம் தூண்டப்பட்டது போல், அவள் என் கண்களை நோக்கி கேட்டாள், "எனக்கு தெரியும் என்று ஏன் நம்புகிறாய்"

"ஏனென்றால் நாம் ரெண்டு பேரும் ஒரே மாதிரி அல்லவா"

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...