Skip to main content

ஜெயமோகனின் கடுஞ்சாயா


வாழ்வில் முதன்முறையாக என் குருநாதரின் அறிவுரையை பின்பற்றி, அவர் தன் தளத்தில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி ... கடுஞ்சாயா (black tea) செய்து குடித்தபடி இதோ எழுதுகிறேன். ஆஹா, இந்த ஜன்னல் வழி வெளிச்சாரலை கவனித்தபடி கறுப்பு டீயை குடிக்கும் சுகம் அருமை. நாம் வழக்கமாக குடிக்கும் டீயை விடவும் இதற்கு ஒரு அலாதியான சுவை, மணம், குணம் எல்லாம் உள்ளது. சில நொடிகள் இளமை திரும்பி விட்டாற் போல் ஒரு உணர்வு வேறு.

குருநாதர் இந்திய டீயின் வரலாறு, பண்பாடு குறித்தெல்லாம் விரிவாக எழுதி உள்ளார். வெறுமனே இந்த அதிஅற்புத தேநீரின் செய்குறிப்பு மட்டும் தெரிந்து கொள்ள விருப்பம் கொண்டவர்கள் அவர் தளத்துக்கு சென்று தொலைந்து போக வேண்டாம். கீழே சுருக்கமாக தருகிறேன்.

1. தண்ணீரை கொதிக்க வையுங்கள்
2. குமிழ்கள் தோன்றும் முன்னரே இறக்கி விடுங்கள்
3. கால் ஸ்பூன் தேயிலை சேர்த்து கலக்குங்கள்.
4. சரியாக நாற்பது நொடிகளில் எடுத்து வடிகட்டவும்.
5. சர்க்கரை சேர்க்கவும்.

இது கீழைத்தேய தேனீராக இருக்க வேண்டும். ஆங்கில டீ முற்றிலும் மாறாக தயாரிக்கப் படுகிறது. நிமிடக்கணக்கில் கொதிக்க வைக்க்கிறார்கள். 41 நொடிகள் கொதிக்க வைத்தால் அது விஷம் என்று சீனர்கள் கருதுவதாகவும் மிருகங்களுக்கு கூட அதை கொடுக்க மாட்டார்கள் என்றும் ஜெ குறிப்பிடுகிறார். சரிதான், குரு ஒரு சந்தேகம்.

சீனர்கள் மிருகங்களுக்கு டீ கொடுப்பார்களா என்ன?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...