Skip to main content

ராபர்ட் பிளை கவிதைகள்

இந்த மாத தாமரை இதழில் வெளியாகி உள்ள எனது மொழியாக்க கவிதைகள்



மகிழ்ச்சியின் மாதம்

குருட்டுக் குதிரை செர்ரி மரங்களுடன் நிற்கிறது.
தண்மையான பூமியில் இருந்து எலும்புகள் மின்னும்.
ஏறத்தாழ ஆகாயம் வரை
இதயம் துள்ளும்! ஆனால் அரற்றல்களும் தாவர இழை உறுப்புகளும்
நம்மை திரும்ப இருளுக்குள் இழுக்கும்.
இரவு நம்மை எடுத்துக் கொள்ளும். ஆனால்
ஒரு விலங்குப்பாதம்
சாலையை வெளிச்சமூட்ட இருட்டில் இருந்து
வெளிவருகிறது. ஒன்றும் பிரச்சனையில்லை.
எனது அனல் தடயங்களை இரவின் ஊடாக தொடர்வேன்.


மரணத்துக்குப் பிறகு காலம் பின்னோடுகிறது


விதவைகள் மற்றும் அனாதைகளுக்காக ரொட்டி அரைக்கும் சாம்சன்
தனக்கு அநியாயம் இழைக்கப்பட்டதை மறக்கிறான், பிலிஸ்டைனர்கள்
அவனிடமிருந்து பிடுங்கின பதில்கள் சிங்கத்துக்குள் திரும்புகின்றன. கசப்பும் இனிமையும் மணம் புரியும்.
அவனே சிங்கத்துக்கு அநியாயம் செய்தான். இப்போது கோதுமைப் பயிர்
காற்றை தன் மனைவி வாலால் வருடுகிறது; கழுதை
நீண்ட புற்களில் ஓடுகிறது, மேலும், சுவர்க்கத்தை விரைந்து பார்த்தபடியால், நரியின் உடல் இளங்காவி பூமியில் ஓய்வாகச் செல்லும்.


மரணத்துக்குப் பின் ஆன்மா தன் சந்தடியற்ற வீட்டுக்கு
பாலும் தேனும் அருந்த திரும்பும். உடைந்த உத்தரங்கள் சூரியோதய வாயிற்கதவுகளை திரும்ப சேர்க்கும், மேலும் தேனீக்கள் புளித்த
இறைச்சியில் பாடும். மீண்டும் தொட்டிலில் அவனது முடி
நீளமாய் பொன்னிறமாய் வளரும்; டிலிலாவின் கத்திரிக்கோல்
இரு குட்டி விளையாட்டுக் கத்திகளாக திரும்ப மாறும்.
பின் எப்போதும் அஸ்தமனம் மற்றும் நிழல்களால் துரத்தப்படாமல், சாம்சன்
கிழக்கு சமுத்திரத்தில் மூழ்கி, பிறக்கிறான்.


பழைய ஆசிரியர்களிடத்து நன்றியறிதல்



உறைந்த ஏரி மேல் வீறாப்பாய் அல்லது ஓய்வாய் நடக்கையில்
நாம் இதுவரை என்றுமே இருந்திராத இடத்தில் நம் காலடிகளை வைக்கிறோம்.
நாம் நடக்காததன் மீது நடக்கிறோம். ஆனால் சங்கடப்படுகிறோம்.
கீழே உள்ளது நம் பழைய ஆசிரியர்கள் அன்றி வேறு யார்?

மனிதப் பளுவை என்றுமே ஏற்றிராத நீர் – நாங்கள்
அப்போது மாணவர்கள் – எங்கள் பாதங்களை ஏந்துகிறது,
மேலும் ஒரு மைல் தொலைவுக்கு முன்னே செல்கிறது.
நமக்கு கீழே ஆசிரியர்கள், மேலும் நம்மைச் சுற்றி நிச்சலனம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...